1 ⁽மன்னரைக் குறித்து யான்␢ கவிதை புனைகின்ற போழ்து,␢ இனியதொரு செய்தியால்␢ என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது;␢ திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென␢ என் நாவும் ஆகிடுமே!⁾

2 ⁽மானிட மைந்தருள்␢ பேரழகுப் பெருமகன் நீர்;␢ உம் இதழினின்று அருள் வெள்ளம்␢ பாய்ந்துவரும்;␢ கடவுள் உமக்கு என்றென்றும்␢ ஆசி வழங்குகின்றார்.⁾

3 ⁽வீரமிகு மன்னா! மாட்சியொடு␢ உம் மாண்பும் துலங்கிடவே,␢ உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!⁾

4 ⁽உண்மையைக் காத்திட,␢ நீதியை நிலைநாட்டிட,␢ மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்!␢ உம் வலக்கை␢ அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக!⁾

5 ⁽உம்முடைய கணைகள் கூரியன;␢ மன்னர்தம் மாற்றாரின்␢ நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம்␢ உம் காலடியில் வீழ்ந்திடுவர்.⁾

6 ⁽இறைவனே, என்றுமுளது␢ உமது அரியணை;␢ உமது ஆட்சியின் செங்கோல்␢ வளையாத செங்கோல்.⁾

7 ⁽நீதியே உமது விருப்பம்;␢ அநீதி உமக்கு வெறுப்பு;␢ எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள்,␢ மகிழ்ச்சியின் நெய்யால்␢ உமக்குத் திருப்பொழிவு செய்து,␢ உம் அரசத் தோழரினும் மேலாய்␢ உம்மை உயர்த்தினார்.⁾

8 ⁽நறுமணத் துகள், அகிலொடு␢ இலவங்கத்தின் மணங்கமழும்␢ உம் ஆடையெலாம்;␢ தந்தம் இழைத்த மாளிகைதனிலே␢ யாழிசை உம்மை மகிழ்விக்கும்.⁾

9 ⁽அருமைமிகு அரசிள மகளிர்␢ உம்மை எதிர்கொள்வர்;␢ ஓபீரின் பொன் அணிந்து␢ வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் § பட்டத்து அரசி!⁾

10 ⁽கேளாய் மகளே! கருத்தாய்க்␢ காதுகொடுத்துக் கேள்!␢ உன் இனத்தாரை மறந்துவிடு;␢ பிறந்தகம் மறந்துவிடு.⁾

11 ⁽உனது எழிலில்␢ நாட்டங்கொள்வார் மன்னர்;␢ உன் தலைவர் அவரே;␢ அவரைப் பணிந்திடு!⁾

12 ⁽தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;␢ செல்வமிகு சீமான்கள்␢ உன்னருள் வேண்டி நிற்பர்.⁾

13 ⁽அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி␢ தங்கமிழைத்த உடையணிந்து␢ தோன்றிடுவாள்.⁾

14 ⁽பலவண்ணப் பட்டுடுத்தி␢ மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;␢ கன்னித் தோழியர் புடைசூழ␢ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.⁾

15 ⁽மன்னவரின் மாளிகைக்குள்␢ நுழையும்போது அவர்கள்␢ மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்␢ அழைத்து வரப்படுவர்.⁾

16 ⁽உம் தந்தையரின் அரியணையில்␢ உம் மைந்தரே வீற்றிருப்பர்;␢ அவர்களை நீர் உலகுக்கெலாம்␢ இளவரசர் ஆக்கிடுவீர்.⁾

17 ⁽என் பாடல் வழிவழியாய்␢ உம் பெயரை நிலைக்கச் செய்யும்;␢ ஆகையால், எல்லா இனத்தாரும்␢ உமை வாழ்த்திடுவர்.⁾

Psalm 45 ERV IRV TRV