1 ⁽கலைமான் நீரோடைகளுக்காக␢ ஏங்கித் தவிப்பது போல்␢ கடவுளே! என் நெஞ்சம்␢ உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.⁾

2 ⁽என் நெஞ்சம் கடவுள்மீது,␢ உயிருள்ள இறைவன்மீது␢ தாகம் கொண்டுள்ளது;␢ எப்பொழுது நான்␢ கடவுள் முன்னிலையில் வந்து␢ நிற்கப்போகின்றேன்?⁾

3 ⁽இரவும் பகலும் என் கண்ணீரே␢ எனக்கு உணவாயிற்று;␢ ‛உன் கடவுள் எங்கே?’ என்று␢ என்னிடம் *தீயோர் கேட்கின்றனர்.*⁾

4 ⁽மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக்␢ கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே!␢ ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க␢ விழாக்கூட்டத்தில் நடந்தேனே!␢ இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது,␢ என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.⁾

5 ⁽என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?␢ நீ கலக்கமுறுவது ஏன்? § கடவுளையே நம்பியிரு;␢ என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு␢ இன்னும் நான் அவருக்கு␢ நன்றி செலுத்துவேன்.⁾

6 ⁽என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது;␢ ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும்,␢ எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும்␢ உம்மை நான் நினைத்துக் கொண்டேன்.⁾

7 ⁽உம் அருவிகள் இடியென முழங்கிட␢ ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது;␢ உம் சிற்றலைகளும் பேரலைகளும்␢ என்மீது புரண்டோடுகின்றன.⁾

8 ⁽நாள்தோறும் ஆண்டவர் தமது␢ பேரன்பைப் பொழிகின்றார்;␢ இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்;␢ எனக்கு வாழ்வளிக்கும்␢ இறைவனை நோக்கி மன்றாடுவேன்.⁾

9 ⁽என் கற்பாறையாகிய இறைவனிடம்␢ ‛ஏன் என்னை மறந்தீர்;␢ எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன்␢ துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன்.⁾

10 ⁽‛உன் கடவுள் எங்கே?’ என்று␢ என் பகைவர் நாள்தோறும்␢ என்னைக் கேட்பது,␢ என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல␢ என்னைத் தாக்குகின்றது.⁾

11 ⁽என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?␢ நீ கலக்கமுறுவது ஏன்?␢ கடவுளையே நம்பியிரு.␢ என் மீட்பராம் கடவுளை␢ இன்னும் நான் போற்றுவேன். § என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு␢ இன்னும் நான் அவருக்கு␢ நன்றி செலுத்துவேன்.⁾

Psalm 42 ERV IRV TRV