1 ⁽ஆண்டவரை நோக்கி அபயக்குரல்␢ எழுப்புகின்றேன்; உரத்த குரலில்␢ ஆண்டவரின் இரக்கத்திற்காக␢ வேண்டுகின்றேன்.⁾

2 ⁽என் மனக்குறைகளை␢ அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;␢ அவர் திருமுன்னே என் இன்னலை␢ எடுத்துரைக்கின்றேன்;⁾

3 ⁽என் மனம் சோர்வுற்றிருந்தது;␢ நான் செல்லும் வழியை␢ அவர் அறிந்தேயிருக்கின்றார்;␢ நான் செல்லும் வழியில் அவர்கள்␢ எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.⁾

4 ⁽வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;␢ என்னைக் கவனிப்பார் எவருமிலர்;␢ எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;␢ என் நலத்தில் அக்கறை கொள்வார்␢ எவருமிலர்.⁾

5 ⁽ஆண்டவரே! உம்மை நோக்கிக்␢ கதறுகின்றேன்;␢ ‛நீரே என் அடைக்கலம்;␢ உயிர் வாழ்வோர் நாட்டில்␢ நீரே என் பங்கு’.⁾

6 ⁽என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;␢ ஏனெனில், நான் மிகவும்␢ தாழ்த்தப்பட்டுள்ளேன்;␢ என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ ஏனெனில், அவர்கள் என்னைவிட␢ வலிமைமிக்கோர்.⁾

7 ⁽சிறையினின்று என்னை விடுவித்தருளும்;␢ உமது பெயருக்கு␢ நான் நன்றி செலுத்துவேன்;␢ நீதிமான்கள் என்னைச்␢ சூழ்ந்து நிற்பார்கள்;␢ ஏனெனில், நீர் எனக்குப்␢ பெரும் நன்மை செய்கின்றீர்.⁾

Psalm 142 ERV IRV TRV