1 ⁽ஆண்டவரே, எத்தனை நாள்␢ என்னை மறந்திருப்பீர்?␢ இறுதிவரை மறந்துவிடுவீரோ?␢ இன்னும் எத்தனை நாள்␢ உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?⁾

2 ⁽எத்தனை நாள் வேதனையுற்று␢ எனக்குள் போராடுவேன்?␢ நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;␢ எத்தனை நாள் என் எதிரி␢ எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?⁾

3 ⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ என்னைக் கண்ணோக்கி␢ எனக்குப் பதில் அளித்தருளும்;␢ என் விழிகளுக்கு ஒளியூட்டும்.⁾

4 ⁽அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில்␢ ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி,␢ ‛நான் அவனை வீழ்த்திவிட்டேன்’␢ என்று சொல்லமாட்டான்;␢ நான் வீழ்ச்சியுற்றேன் என்று␢ என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.⁾

5 ⁽நான் உமது பேரன்பில் நம்பிக்கை␢ வைத்திருக்கின்றேன்;␢ நீர் அளிக்கும் விடுதலையால்␢ என் இதயம் களிகூரும்.⁾

6 ⁽நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ நன்மை பல செய்துள்ளார்.⁾

Psalm 13 ERV IRV TRV