1 ⁽ஆண்டவரே வீட்டைக்␢ கட்டவில்லையெனில்,␢ அதைக் கட்டுவோரின்␢ உழைப்பு வீணாகும்;␢ ஆண்டவரே நகரைக்␢ காக்கவில்லையெனில்,␢ காவலர்கள் விழித்திருப்பதும்␢ வீணாகும்.⁾

2 ⁽வைகறையில் விழித்தெழுந்து␢ நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை␢ மானிடர் தம் உணவுக்காக␢ வருந்தி உழைப்பது வீணே!␢ உறங்கும்போதும் கடவுளின் அன்பர்␢ தேவையானதை அவரிடமிருந்து␢ பெற்றுக்கொள்வர்.⁾

3 ⁽பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்;␢ மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.⁾

4 ⁽இளமையில் ஒருவருக்குப்␢ பிறக்கும் மைந்தர்␢ வீரரின் கையிலுள்ள␢ அம்புகளுக்கு ஒப்பானவர்.⁾

5 ⁽அவற்றால் தம் அம்பறாத் தூணியை␢ நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்;␢ நீதிமன்றத்தில் எதிரிகளோடு␢ வழக்காடும்போது␢ அவர் இகழ்ச்சியடையமாட்டார்.⁾

Psalm 127 ERV IRV TRV