1 ⁽மலைகளை நோக்கி␢ என் கண்களை␢ உயர்த்துகின்றேன்!␢ எங்கிருந்து எனக்கு உதவி வரும்?⁾

2 ⁽விண்ணையும் மண்ணையும் § உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே␢ எனக்கு உதவி வரும்.⁾

3 ⁽அவர் உம் கால் இடறாதபடி␢ பார்த்துக் கொள்வார்;␢ உம்மைக் காக்கும் அவர்␢ உறங்கிவிடமாட்டார்.⁾

4 ⁽இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்␢ கண்ணயர்வதுமில்லை;␢ உறங்குவதும் இல்லை.⁾

5 ⁽ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;␢ அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;␢ அவரே உமக்கு நிழல் ஆவார்!⁾

6 ⁽பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;␢ இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.⁾

7 ⁽ஆண்டவர் உம்மை␢ எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;␢ அவர் உம் உயிரைக் காத்திடுவார்.⁾

8 ⁽நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்␢ இப்போதும் எப்போதும்␢ ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.⁾

Psalm 121 ERV IRV TRV