1 நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது, உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!

2 கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.

3 பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா? நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?

4 வீரனின் கூரிய அம்புகளும், சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.

5 பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும் கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.

6 சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.

7 நான் சமாதானம் வேண்டும் என்றேன். ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.

Psalm 120 ERV IRV TRV