1 ⁽ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்!␢ அவர்தம் பெயரைச்␢ சொல்லி வழிபடுங்கள்!␢ அவர்தம் செயல்களை␢ மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.⁾

2 ⁽அவருக்குப் பாடல் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!␢ அவர்தம் வியத்தகு செயல்கள்␢ அனைத்தையும் எடுத்துரையுங்கள்!⁾

3 ⁽அவர்தம் திருப்பெயரை␢ மாட்சிப்படுத்துங்கள்;␢ ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்␢ அக்களிப்பதாக!⁾

4 ⁽ஆண்டவரையும்␢ அவரது ஆற்றலையும் தேடுங்கள்!␢ அவரது திருமுகத்தை␢ இடையறாது நாடுங்கள்!⁾

5 ⁽அவர் செய்த வியத்தகு செயல்களை␢ நினைவு கூருங்கள்!␢ அவர்தம் அருஞ்செயல்களையும்,␢ அவரது வாய் மொழிந்த␢ நீதித் தீர்ப்புகளையும்␢ நினைவில் கொள்ளுங்கள்.⁾

6 ⁽அவரின் ஊழியராம்␢ ஆபிரகாமின் வழிமரபே!␢ அவர் தேர்ந்துகொண்ட␢ யாக்கோபின் பிள்ளைகளே!⁾

7 ⁽அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!␢ அவரின் நீதித்தீர்ப்புகள்␢ உலகம் அனைத்திற்கும் உரியன.⁾

8 ⁽அவர் தமது உடன்படிக்கையை␢ என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;␢ ஆயிரம் தலைமுறைக்கென␢ தாம் அளித்த வாக்குறுதியை␢ நினைவுகூர்கின்றார்.⁾

9 ⁽ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட␢ உடன்படிக்கையையும்␢ ஈசாக்குக்குத் தாம்␢ ஆணையிட்டுக் கூறியதையும்␢ அவர் நினைவில் கொண்டுள்ளார்.⁾

10 ⁽யாக்கோபுக்கு நியமமாகவும்␢ இஸ்ரயேலுக்கு␢ என்றுமுள உடன்படிக்கையாகவும்␢ அதை அவர் உறுதிப்படுத்தினார்.⁾

11 ⁽‘கானான் நாட்டை␢ உங்களுக்கு அளிப்பேன்;␢ அப்பங்கே உங்களுக்கு␢ உரிமைச் சொத்தாய் இருக்கும்’␢ என்றார் அவர்.⁾

12 ⁽அப்போது, அவர்கள்␢ மதிப்பிலும் எண்ணிக்கையிலும்␢ குறைந்தவராய் இருந்தார்கள்;␢ அங்கே அவர்கள்␢ அன்னியராய் இருந்தார்கள்.⁾

13 ⁽அவர்கள் ஒரு நாட்டினின்று␢ மற்றொரு நாட்டிற்கும்␢ ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும்␢ அலைந்து திரிந்தார்கள்.⁾

14 ⁽யாரும் அவர்களை ஒடுக்குமாறு␢ அவர் விட்டு விடவில்லை;␢ அவர்களின் பொருட்டு மன்னர்களை␢ அவர் கண்டித்தார்.⁾

15 ⁽‘நான் அருள்பொழிவு செய்தாரைத்␢ தொடாதீர்!␢ என் இறைவாக்கினர்க்குத்␢ தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர்.⁾

16 ⁽நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;␢ உணவெனும் ஊன்றுகோலை␢ முறித்துவிட்டார்.⁾

17 ⁽அவர்களுக்கு முன் ஒருவரை␢ அனுப்பிவைத்தார்;␢ யோசேப்பு என்பவர்␢ அடிமையாக விற்கப்பட்டார்.⁾

18 ⁽அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு␢ அவரைத் துன்புறுத்தினர்.␢ அவர்தம் கழுத்தில்␢ இரும்புப் பட்டையை மாட்டினர்.⁾

19 ⁽காலம் வந்தது;␢ அவர் உரைத்தது நிறைவேறிற்று;␢ ஆண்டவரின் வார்த்தை␢ அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.⁾

20 ⁽மன்னர் ஆளனுப்பி␢ அவரை விடுதலை செய்தார்;␢ மக்களினங்களின் தலைவர்␢ அவருக்கு விடுதலை அளித்தார்;⁾

21 ⁽அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்␢ தலைவர் ஆக்கினார்;␢ தம் உடைமைகளுக்கெல்லாம்␢ பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.⁾

22 ⁽அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;␢ அவருடைய அவைப்பெரியோருக்கு␢ நல்லறிவு புகட்டினார்.⁾

23 ⁽பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;␢ யாக்கோபு காம் நாட்டில்␢ அன்னியராய் வாழ்ந்தார்.⁾

24 ⁽ஆண்டவர் தம் மக்களைப்␢ பல்கிப் பெருகச் செய்தார்;␢ அவர்களின் எதிரிகளைவிட அவர்களை␢ வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.⁾

25 ⁽தம் மக்களை வெறுக்கும்படியும்,␢ தம் அடியார்களுக்கு எதிராகச்␢ சூழ்ச்சி செய்யும்படியும்␢ அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.⁾

26 ⁽அவர்தம் ஊழியராகிய மோசேயையும்,␢ தாம் தேர்ந்தெடுத்த␢ ஆரோனையும் அனுப்பினார்.⁾

27 ⁽அவர்கள் எகிப்தியரிடையே␢ அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்;␢ காம் நாட்டில் வியத்தகு செயல்களைச்␢ செய்து காட்டினர்.⁾

28 ⁽அவர் இருளை அனுப்பி␢ நாட்டை இருட்டாக்கினார்;␢ அவருடைய சொற்களை␢ எதிர்ப்பார் இல்லை.⁾

29 ⁽அவர்களுடைய நீர்நிலைகளை␢ அவர் இரத்தமாக மாற்றினார்;␢ அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.⁾

30 ⁽அவர்களது நாட்டிற்குள்␢ தவளைகள் ஏறிவந்தன;␢ மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும்␢ அவை நுழைந்தன.⁾

31 ⁽அவர் கட்டளையிட,␢ அவர்களுடைய நாடு முழுவதிலும்␢ ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.⁾

32 ⁽அவர் நீருக்குப் பதிலாகக்␢ கல்லை மழையாகப் பொழிந்தார்;␢ அவர்களது நாடெங்கும்␢ மின்னல் தெறிக்கச் செய்தார்.⁾

33 ⁽அவர் அவர்களின்␢ திராட்சைச் செடிகளையும்␢ அத்திமரங்களையும் அழித்தார்;␢ அவர்களது நாடெங்குமுள்ள␢ மரங்களை முறித்தார்.⁾

34 ⁽அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்␢ எண்ணற்ற வெட்டுப்புழுக்களும்␢ அங்கே தோன்றின.⁾

35 ⁽அவை அவர்களது நாட்டின்␢ பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன;␢ அவர்களது நிலத்தின் விளைச்சல்களை␢ விழுங்கிவிட்டன.⁾

36 ⁽அவர் அவர்களது நாட்டின்␢ தலைப்பேறுகள் அனைத்தையும்␢ தாக்கினார்; அவர்களது␢ ஆண்மையின் முதற்பேறுகள்␢ அனைத்தையும் வீழ்த்தினார்.⁾

37 ⁽அவர் இஸ்ரயேலரை␢ வெள்ளியோடும் பொன்னோடும்␢ புறப்படச் செய்தார்;␢ அவர்கள் குலங்களில் எவரும்␢ தளர்ந்து போகவில்லை.⁾

38 ⁽அவர்கள் வெளியேறுகையில்␢ எகிப்தியர் அகமகிழ்ந்தனர்;␢ ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம்␢ அவர்களை ஆட்கொண்டிருந்தது.⁾

39 ⁽அவர் அவர்களைப் பாதுகாக்க␢ மேகத்தைப் பரப்பினார்;␢ இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.⁾

40 ⁽அவர்கள் கேட்டதால்␢ அவர் காடைகளை வரச்செய்தார்;␢ வானினின்று வந்த உணவால்␢ அவர்களை நிறைவுறச் செய்தார்.⁾

41 ⁽அவர் கற்பாறையைப் பிளந்தார்;␢ தண்ணீர் பொங்கி வழிந்தது;␢ அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.⁾

42 ⁽ஏனெனில், தம் அடியார்␢ ஆபிரகாமுக்கு அளித்த␢ தமது தூய வாக்குறுதியை␢ அவர் நினைவுகூர்ந்தார்.⁾

43 ⁽அவர் தம் மக்களை␢ மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;␢ அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை␢ ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.⁾

44 ⁽அவர் வேற்றினத்தாரின் நாடுகளை␢ அவர்களுக்கு அளித்தார்;␢ மக்களினங்களது உழைப்பின் பயனை␢ அவர்கள் உரிமையாக்கிக்␢ கொள்ளுமாறு செய்தார்.⁾

45 ⁽அவர்கள் அவருடைய␢ கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,␢ அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே␢ அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா!⁾

Psalm 105 ERV IRV TRV