1 ⁽ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே!␢ பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து␢ போயிற்றே!␢ திருத்தலக் கற்கள்␢ தெருமுனை எங்கும்␢ சிதறிக் கிடக்கின்றனவே!⁾

2 ⁽பசும்பொன்னுக்கு இணையான␢ சீயோனின் அருமை மைந்தர் இன்று␢ குயவனின் கைவினையாம்␢ மண்பாண்டம் ஆயினரே!⁾

3 ⁽குள்ளநரிகளும்␢ பாலூட்டித் தம் குட்டிகளைப்␢ பேணிக்காக்கும்!␢ பாலைநிலத் தீக்கோழியென␢ என் மக்களாம் மகள்␢ கொடியவள் ஆயினளே!⁾

4 ⁽பால்குடி மறவாத மழலைகளின் நாவு␢ தாகத்தால்␢ அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்!␢ பச்சிளங் குழந்தைகள்␢ கெஞ்சுகின்ற உணவுதனை␢ அளித்திடுவார் யாருமிலர்!⁾

5 ⁽சுவையுணவு அருந்தினோர்␢ நடுத்தெருவில் நலிகின்றனர்!␢ பட்டுடுத்தி வளர்ந்தோர்␢ குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!⁾

6 ⁽ஒருவரும் கை வைக்காமல்␢ நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற␢ சோதோமின் பாவத்தைவிட,␢ என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!⁾

7 ⁽அவள் இளவரசர்␢ பனியினும் தூயவராய்ப்␢ பாலினும் வெண்மையராய்ப்␢ பவளத்தினும் சிவந்த மேனியராய்␢ நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!⁾

8 ⁽இப்பொழுதோ, அவர்கள் தோற்றம்␢ கரியினும் கருமை ஆனது;␢ அவர்களைத் தெருக்களில்␢ அடையாளம் காண இயலவில்லை!␢ அவர்கள் தோல்␢ எலும்போடு ஒட்டியிருந்தது.␢ காய்ந்த மரம்போல்␢ அது உலர்ந்து போனது!⁾

9 ⁽பசியினால் மாண்டவர்களினும்␢ வாளினால் மாண்டோர்␢ நற்பேறு பெற்றோர்!␢ ஏனெனில், முன்னையோர்␢ வயல் தரும் விளைச்சலின்றிக்␢ குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!⁾

10 ⁽இரங்கும் பெண்டிரின் கைகள்␢ தம் குழந்தைகளை வேகவைத்தன!␢ என் மக்களாகிய மகள்␢ அழிவுற்றபோது␢ பிள்ளைகளே அன்னையர்க்கு␢ உணவாயினர்!⁾

11 ⁽ஆண்டவர் தம் சீற்றத்தைத்␢ தீர்த்துக் கொண்டார்;␢ தம் கோபக் கனலைக் கொட்டினார்;␢ சீயோனில் நெருப்பை மூட்டினார்;␢ அது அதன் அடித்தளங்களை␢ விழுங்கிற்று.⁾

12 ⁽பகைவரும் எதிரிகளும்␢ எருசலேம் வாயில்களில்␢ நுழைவர் என்று␢ மண்ணுலகின் மன்னரோ␢ பூவுலகில் வாழ்வோரோ␢ நம்பவில்லை.⁾

13 ⁽நகரின் நடுவே␢ நீதிமானின் இரத்தம் சிந்திய␢ இறைவாக்கினரின் பாவமும்␢ குருக்களின் குற்றமுமே␢ இதற்குக் காரணமாம்!⁾

14 ⁽அவர்கள் குருடரெனத்␢ தெருக்களில் தடுமாறினர்;␢ அவர்கள்மீது இரத்தக் கறை␢ எவ்வளவு படிந்திருந்ததெனில்,␢ அவர்கள் ஆடைகளைக்கூட␢ எவராலும் தொட இயலவில்லை.⁾

15 ⁽விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்!␢ விலகுங்கள்!தொடாதீர்கள்! என்று␢ அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்;␢ அவர்கள் அகதிகளாய்␢ அலைந்து திரிந்தார்கள்.␢ ‘இனி நம்மிடம் குடியிரார்,’␢ ‘இனி எம்மிடையே␢ தங்கக்கூடாது’ என்று␢ வேற்றினத்தார் கூறினர்.⁾

16 ⁽ஆண்டவரே தம் முன்னிலையினின்று␢ அவர்களைச் சிதறடித்தார்;␢ இனி அவர்களைக்␢ கண்ணோக்கமாட்டார்.␢ குருவை மதிப்பார் இல்லை;␢ முதியோர்க்கு இரங்குவார் இல்லை.⁾

17 ⁽உதவியை வீணில் எதிர்பார்த்து␢ எம் கண்கள் பூத்துப்போயின!␢ எம்மை விடுவிக்க இயலாத␢ நாட்டினர்க்காய்க்␢ கண் விழித்துக் காத்திருந்தோம்!⁾

18 ⁽எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது;␢ எம் தெருக்களில் கூட␢ எம்மால் நடக்க முடியவில்லை;␢ எம் முடிவு நெருங்கிவிட்டது;␢ எம் நாள்கள் முடிந்துவிட்டன;␢ எம் முடிவு வந்து விட்டது.⁾

19 ⁽வானத்துப் பருந்துகளிலும் விரைவாய்␢ எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்;␢ மலைகளில் எங்களைத்␢ துரத்தி வந்தார்கள்;␢ பாலையில் எங்களுக்காய்ப்␢ பதுங்கி இருந்தார்கள்.⁾

20 ⁽ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று␢ எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர்,␢ அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்!␢ ‘அவரது நிழலில்␢ வேற்றினத்தார் நடுவில்␢ நாம் வாழ்வோம்’ என்று␢ அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!⁾

21 ⁽ஊசு நாட்டில் வாழும் மகளே!␢ ஏதோம்!␢ அகமகிழ்ந்து அக்களித்திடு!␢ கிண்ணம் உன்னையும் வந்தடையும்!␢ நீ குடிவெறி கொண்டு␢ ஆடையின்றிக் கிடப்பாய்!⁾

22 ⁽மகளே! சீயோன்!␢ உன் குற்றப்பழி நீங்கிவிட்டது;␢ உன் அடிமைத்தனம்␢ இனியும் தொடராது;␢ மகளே! ஏதோம்!␢ உன் குற்றத்திற்காக␢ நீ தண்டிக்கப்படுவாய்!␢ உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!⁾

Lamentations 4 ERV IRV TRV