1 ⁽பின்பு யோபைப் பார்த்து␢ ஆண்டவர் கூறினார்:⁾

2 ⁽குற்றம் காண்பவன்,␢ எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா?␢ கடவுளோடுவாதாடுபவன்␢ விடையளிக்கட்டும்.⁾

3 ⁽யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:⁾

4 ₍இதோ! எளியேன் யான்␢ இயம்புதற்குண்டோ? என் வாயைக்␢ கையால் பொத்திக் கொள்வேன்.₎

5 ⁽ஒருமுறை பேசினேன்;␢ மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;␢ இனிப் பேசவேமாட்டேன்.⁾

6 ⁽ஆண்டவர் சூறாவளியினின்று␢ யோபுக்கு அருளிய பதில்:⁾

7 ⁽வீரனைப்போல்␢ இடையை இறுக்கிக் கட்டிக்கொள்;␢ வினவுவேன் உன்னிடம்;␢ விடையெனக்கு அளிப்பாய்.⁾

8 ⁽என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா?␢ உன்னைச் சரியெனக் காட்ட␢ என்மீது குற்றம் சாட்டுவாயா?⁾

9 ⁽இறைவனுக்கு உள்ளதுபோல்␢ உனக்குக் கையுண்டோ?␢ அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?⁾

10 ⁽சீர் சிறப்பினால்␢ உன்னை அணி செய்துகொள்;␢ மேன்மையையும், மாண்பினையும்␢ உடுத்திக்கொள்.⁾

11 ⁽கொட்டு உன் கோபப் பெருக்கை!␢ செருக்குற்ற ஒவ்வொருவரையும்␢ நோக்கிடு; தாழ்த்திடு!⁾

12 ⁽செருக்குற்ற எல்லாரையும்␢ நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை␢ அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!⁾

13 ⁽புழுதியில் அவர்களை␢ ஒன்றாய்ப் புதைத்திடு!␢ காரிருளில் அவர் முகங்களை மூடிடு.⁾

14 ⁽அப்பொழுது, உனது வலக்கை␢ உன்னைக் காக்குமென்று␢ நானே ஒத்துக்கொள்வேன்.⁾

15 ⁽இதோ பார், உன்னைப் படைத்ததுபோல்␢ நான் உண்டாக்கிய பெகிமோத்து␢ காளைபோல் புல்லைத் தின்கின்றது.⁾

16 ⁽இதோ காண்,␢ அதன் ஆற்றல் அதன் இடுப்பில்;␢ அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.⁾

17 ⁽அது தன் வாலைக்␢ கேதுருமரம்போல் விரைக்கும்;␢ அதன் தொடை நரம்புகள்␢ கயிறுபோல் இறுகியிருக்கும்;⁾

18 ⁽அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்;␢ அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.⁾

19 ⁽இறைவனின் படைப்புகளில்␢ தலையாயது அதுவே! படைத்தவரே␢ அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.⁾

20 ⁽மலைகள் அதற்குப்␢ புற்பூண்டுகளை விளைவிக்கின்றன;␢ விலங்குகள் எல்லாம்␢ விளையாடுவதும் அங்கேதான்.⁾

21 ⁽அது நிழற்செடிக்கு அடியிலும்␢ நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும்␢ படுத்துக் கிடக்கும்.⁾

22 ⁽அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;␢ ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.⁾

23 ⁽ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது;␢ அதன் முகத்தே யோர்தான் மோதினும்␢ அசைவுறாது.⁾

24 ⁽அதன் கண்காண அதனைக்␢ கட்டமுடியுமோ? கொக்கியால்␢ அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?⁾

Job 40 ERV IRV TRV