1 எலிகூ தொடர்ந்து கூறினான்:

2 ⁽‘நான் இறைவன்முன் நேர்மை␢ யானவன்’ என நீர் சொல்வது␢ சரியென நினைக்கின்றீரா?⁾

3 ⁽‘நான் பாவம் செய்யாததனால்␢ எனக்கு என்ன ஆதாயம்?␢ எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர்.⁾

4 ⁽உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து␢ நான் பதில் அளிக்கின்றேன்;⁾

5 ⁽வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ!␢ உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!⁾

6 ⁽நீர் பாவம் செய்தால்,␢ அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்?␢ நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால்␢ அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?⁾

7 ⁽நீர் நேர்மையாய் இருப்பதால்␢ இவருக்கு நீர் அளிப்பதென்ன?␢ அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன?⁾

8 ⁽உம் கொடுமை உம்மைப்போன்ற␢ மனிதரைக் துன்புறுத்துகின்றது;␢ உம் நேர்மையும் மானிடர்க்கே␢ நன்மை பயக்கின்றது.⁾

9 ⁽கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்;␢ வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.⁾

10 ⁽ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை;␢ ‘எங்கே என்னைப் படைத்த கடவுள்?␢ இரவில் பாடச் செய்பவர் எங்கே?⁾

11 ⁽நானிலத்தின் விலங்குகளைவிட␢ நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும்␢ வானத்துப் புள்ளினங்களை விட␢ நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?”⁾

12 ⁽அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்;␢ பொல்லார் செருக்கின் பொருட்டு␢ அவர் பதில் ஒன்றும் சொல்லார்.⁾

13 ⁽வீண் வேண்டலை␢ இறைவன் கண்டிப்பாய்க் கேளார்;␢ எல்லாம் வல்லவர் அதைக்␢ கவனிக்கவும் மாட்டார்.⁾

14 ⁽இப்படியிருக்க,␢ ‘நான் அவரைப் பார்க்கவில்லை;␢ தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது.␢ நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;’␢ என்று நீர் கூறும்போது,␢ எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?⁾

15 ⁽இப்பொழுதோ,␢ ‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை;␢ மனிதனின் மடமையை அவ்வளவாய்␢ அவர் நோக்குவதில்லை’ என எண்ணி,⁾

16 ⁽யோபு வெற்றுரை விளம்புகின்றார்;␢ அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.⁾

Job 35 ERV IRV TRV