1 ⁽ஆனால் இப்பொழுது,␢ யோபே! எனக்குச் செவிகொடும்;␢ என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.⁾

2 ⁽இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்;␢ என் நாவினால் பேசுகிறேன்.⁾

3 ⁽என் உள்ளத்தின் நேர்மையை␢ என் சொற்கள் விளம்பும்;␢ அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.⁾

4 ⁽இறைவனின் ஆவி என்னைப் படைத்தது;␢ எல்லாம் வல்லவரின் மூச்சு␢ என்னை வாழ்விக்கின்றது.⁾

5 ⁽உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்;␢ என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.⁾

6 ⁽இதோ! இறைவன் முன்னிலையில்␢ நானும் நீவிரும் ஒன்றே;␢ உம்மைப்போல் நானும்␢ களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!⁾

7 ⁽இதோ! நீர் எனக்கு␢ அஞ்சி நடுங்க வேண்டியதில்லை;␢ நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.⁾

8 ⁽உண்மையாகவே என் காதுகளில் விழ␢ நீர் கூறினீர்; நானும்␢ அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்;⁾

9 ⁽‘குற்றமில்லாத் தூயவன் நான்;␢ மாசற்ற வெண் மனத்தான் யான்.⁾

10 ⁽இதோ! அவர் என்னில்␢ குற்றம்காணப் பார்க்கின்றார்;␢ அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.⁾

11 ⁽மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்;␢ என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்’.⁾

12 ⁽இதோ! இது சரியென்று;␢ பதில் உமக்குக் கூறுகிறேன்;␢ கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.⁾

13 ⁽‘என் சொல் எதற்கும்␢ அவர் பதில் கூறுவதில்லை’ என␢ ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?⁾

14 ⁽ஏனெனில், இறைவன் முதலில்␢ ஒருவகையில் இயம்புகின்றார்;␢ இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்;␢ அதை யாரும் உணர்வதில்லை.⁾

15 ⁽கனவில், இரவின் காட்சியில்␢ ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்;␢ படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,⁾

16 ⁽அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்;␢ எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.⁾

17 ⁽இவ்வாறு மாந்தரிடமிருந்து␢ தீவினையை நீக்குகின்றார்;␢ மனிதரிடமிருந்து␢ ஆணவத்தை அகற்றுகின்றார்.⁾

18 ⁽அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும்,␢ உயிரை வாளின் அழிவிலிருந்தும்␢ காக்கின்றார்.⁾

19 ⁽படுக்கையில் படும் வேதனையினாலும்␢ எலும்பில் வரும் தீரா வலியினாலும்␢ அவர்கள் கண்டித்துத்␢ திருத்தப்படுகின்றார்கள்.⁾

20 ⁽அப்போது அவர்களின் உயிர் உணவையும்,␢ அவர்களின் ஆன்மா அறுசுவை␢ உண்டியையும் அருவருக்கும்.⁾

21 ⁽அவர்களின் சதை கரைந்து மறையும்;␢ காணப்படா அவர்களின் எலும்புகள்␢ வெளியே தெரியும்.⁾

22 ⁽அவர்களின் ஆன்மா குழியினையும்␢ அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.⁾

23 ⁽மனிதர் சார்பாக இருந்து,␢ அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும்␢ ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்⁾

24 ⁽அவர்களின் மீது இரங்கி, “குழியில் விழாமல்␢ இவர்களைக் காப்பாற்றும்;␢ ஏனெனில், இவர்களுக்கான␢ மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;⁾

25 ⁽இவர்களின் மேனி␢ இளைஞனதைப்போல் ஆகட்டும்;␢ இவர்கள் இளமையின்␢ நாள்களுக்குத் திரும்பட்டும்”⁾

26 ⁽என்று கடவுளிடம் மன்றாடினால்,␢ அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்;␢ அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு␢ அவர்கள் காணச் செய்வார்;␢ அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.⁾

27 ⁽அவர்கள் மனிதர் முன்␢ இவ்வாறு அறிக்கையிடுவர்;␢ ‘நாங்கள் பாவம் செய்தோம்;␢ நேரியதைக் கோணலாக்கினோம்;␢ இருப்பினும் அதற்கேற்ப␢ நாங்கள் தண்டிக்கப்படவில்லை;⁾

28 ⁽எங்கள் ஆன்மாவைக்␢ குழியில் விழாது அவர் காத்தார்;␢ எங்கள் உயிர் ஒளியைக் காணும்.’⁾

29 ⁽இதோ இறைவன் இவற்றையெல்லாம்␢ மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.⁾

30 ⁽இவ்வாறு குழியிலிருந்து␢ அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்;␢ வாழ்வோரின் ஒளியை␢ அவர்கள் காணச் செய்கின்றார்.⁾

31 ⁽யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்;␢ பேசாதிரும்; நான் பேசுவேன்.⁾

32 ⁽சொல்வதற்கு இருந்தால்,␢ எனக்குப் பதில் சொல்லும்; பேசுக!␢ உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே␢ நான் விழைகின்றேன்.⁾

33 ⁽இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்;␢ பேசாதிரும்; நான் உமக்கு␢ ஞானத்தைக் கற்பிப்பேன்.⁾

Job 33 ERV IRV TRV