1 ⁽யோபு இன்னும் தொடர்ந்து␢ பேசிய உரை:⁾

2 ⁽காண்பேனா முன்னைய திங்கள்களை;␢ கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!⁾

3 ⁽அப்போது அவர் விளக்கு␢ என் தலைமீது ஒளிவீசிற்று;␢ அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.⁾

4 ⁽அப்போது என் இளமையின் நாள்களில்␢ நான் இருந்தேன்; கடவுளின் கருணை␢ என் குடிசை மீது இருந்தது.⁾

5 ⁽அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;␢ என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.⁾

6 ⁽அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;␢ பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.⁾

7 ⁽நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,␢ பொது மன்றத்தில்␢ என் இருக்கையில் அமர்கையிலும்,⁾

8 ⁽என்னைக் கண்டதும்␢ இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;␢ முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.⁾

9 ⁽உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;␢ கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.⁾

10 ⁽தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;␢ அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.⁾

11 ⁽என்னைக் கேட்ட செவி,␢ என்னை வாழ்த்தியது;␢ என்னைப் பார்த்த கண்␢ எனக்குச் சான்று பகர்ந்தது.⁾

12 ⁽ஏனெனில், கதறிய ஏழைகளை␢ நான் காப்பாற்றினேன்;␢ தந்தை இல்லார்க்கு உதவினேன்.⁾

13 ⁽அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;␢ கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக்␢ களிப்பால் பாடச் செய்தேன்.⁾

14 ⁽அறத்தை அணிந்தேன்;␢ அது என் ஆடையாயிற்று.␢ நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.⁾

15 ⁽பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;␢ காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.⁾

16 ⁽ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;␢ அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக␢ வாதிட்டேன்.⁾

17 ⁽கொடியவரின் பற்களை உடைத்தேன்;␢ அவரின் பற்களுக்கு இரையானவரை␢ விடுவித்தேன்.⁾

18 ⁽நான் எண்ணினேன்;␢ ‘மணல் மணியைப்போல்␢ நிறைந்த நாள் உடையவனாய்␢ என் இல்லத்தில் சாவேன்.⁾

19 ⁽என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;␢ இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.⁾

20 ⁽என் புகழ் என்றும் ஓங்கும்;␢ என் வில் வளைதிறன் கொண்டது.’⁾

21 ⁽எனக்குச் செவிகொடுக்க␢ மக்கள் காத்திருந்தனர்;␢ என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.⁾

22 ⁽என் சொல்லுக்கு மறுசொல்␢ அவர்கள் கூறவில்லை;␢ என் மொழிகள் அவர்களில் தங்கின.⁾

23 ⁽மழைக்கென அவர்கள்␢ எனக்காய்க் காத்திருந்தனர்;␢ மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.⁾

24 ⁽நம்பிக்கை இழந்தோரை␢ என் புன்முறவல் தேற்றியது;␢ என் முகப்பொலிவு உரமூட்டியது.⁾

25 ⁽நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;␢ தலைவனாய்த் திகழ்ந்தேன்;␢ வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;␢ அழுகின்றவர்க்கு␢ ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.⁾

Job 29 ERV IRV TRV