1 ⁽யோபு தமது உரையைத்␢ தொடர்ந்து கூறியது:⁾

2 ⁽என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை!␢ அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்;␢ எல்லாம் வல்லவர் எனக்கு␢ வாழ்வைக் கசப்பாக்கினார்.⁾

3 ⁽என் உடலில் உயிர் இருக்கும்வரை,␢ என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,⁾

4 ⁽என் உதடுகள் வஞ்சகம் உரையா;␢ என் நாவும் பொய்யைப் புகலாது.⁾

5 ⁽நீங்கள் சொல்வது சரியென␢ ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.␢ சாகும்வரையில்␢ என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.⁾

6 ⁽என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்;␢ விடவே மாட்டேன்; என் வாழ்நாளில்␢ எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.⁾

7 ⁽என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்;␢ என் எதிரிகள்␢ நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.⁾

8 ⁽கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து,␢ அவர்களின் உயிரைப் பறிக்கும்போது,␢ அவர்களுக்கு என்ன நம்பிக்கை?⁾

9 ⁽அவர்கள்மேல் கேடுவிழும்போது␢ இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?⁾

10 ⁽எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை␢ அவர்கள் நாடுவார்களா?␢ கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?⁾

11 ⁽இறைவனின் கைத்திறனை␢ நான் உங்களுக்குக் கற்பிப்பேன்;␢ எல்லாம் வல்லவரின் திட்டங்களை␢ மறைக்கமாட்டேன்.⁾

12 ⁽இதோ! நீங்கள் யாவருமே␢ இதைக் கண்டிருக்கின்றீர்கள்;␢ பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?⁾

13 ⁽இதுவே கொடிய மனிதர்␢ இறைவனிடமிருந்து பெறும் பங்கு;␢ பொல்லாதவர்␢ எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.⁾

14 ⁽அவர்களின் பிள்ளைகள் பெருகினும்␢ வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர்␢ உண்டு நிறைவடையார்.⁾

15 ⁽அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்;␢ அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.⁾

16 ⁽மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்;␢ அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.⁾

17 ⁽ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்;␢ மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.⁾

18 ⁽சிலந்தி கூடு கட்டுவதுபோலும்,␢ காவற்காரன் குடில் போடுவதுபோலும்␢ அவர்கள் வீடு கட்டுகின்றனர்.⁾

19 ⁽படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்;␢ ஆனால் இனி அவ்வாறு இராது;␢ கண் திறந்து பார்க்கின்றனர்;␢ செல்வம் காணாமற் போயிற்று.⁾

20 ⁽திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்;␢ சுழற்காற்று இரவில்␢ அவர்களைத் தூக்கிச் செல்லும்.⁾

21 ⁽கீழைக் காற்று␢ அவர்களை அடித்துச் செல்லும்;␢ அவர்களின் இடத்திலிருந்து␢ அவர்களைப் பெயர்த்துச் செல்லும்;⁾

22 ⁽ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்;␢ அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.⁾

23 ⁽அவர்களைப் பார்த்து␢ அது கைகொட்டி நகைக்கும்;␢ அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.⁾

Job 27 ERV IRV TRV