1 அதற்கு யோபு கூறிய பதில்:

2 ⁽என்போன்ற வலிமையற்றவர்க்கு␢ எத்துணைப் துணைபுரிந்தீர்!␢ ஆற்றலற்ற தோளுக்கு␢ எவ்வளவு துணைநின்றீர்!⁾

3 ⁽என் போன்ற அறிவற்றவர்க்கு␢ எவ்வளவு அறிவுரை கூறினீர்!␢ நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!⁾

4 ⁽எவர் துணைகொண்டு␢ இயம்பினீர் இம்மொழிகளை?␢ எவர்தம் ஏவுதல்␢ உம்மிடமிருந்து வெளிப்பட்டது?⁾

5 ⁽கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;␢ நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும்␢ அஞ்சுகின்றன.⁾

6 ⁽பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;␢ படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.⁾

7 ⁽வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;␢ காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.⁾

8 ⁽நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்;␢ அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.⁾

9 ⁽தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;␢ முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.⁾

10 ⁽நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,␢ இருளுக்கும் ஒளிக்குமிடையில்␢ எல்லை அமைத்தார்.⁾

11 ⁽விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;␢ அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.⁾

12 ⁽ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;␢ இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.⁾

13 ⁽தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;␢ தம் கையால் விரைந்தோடும் பாம்பை␢ ஊடுருவக் குத்தினார்.⁾

14 ⁽ஓ! இவையாவும்␢ அவர்தம் செயல்களின் விளிம்புகளே!␢ எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.␢ அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய␢ யாரால் இயலும்?⁾

Job 26 ERV IRV TRV