1 ⁽பின்னர் தேமானியனான எலிப்பாசு␢ பேசத் தொடங்கினான்:⁾

2 ⁽மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?␢ மதிநுட்பம் உடையவரால்␢ அவருக்குப் பயன் உண்டா?⁾

3 ⁽நீர் நேர்மையாக இருப்பது␢ எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?␢ நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது␢ அவர்க்கு நன்மை பயக்குமா?⁾

4 ⁽நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா␢ அவர் உம்மைக் கண்டிக்கிறார்?␢ அதனை முன்னிட்டா␢ உம்மைத் தீர்ப்பிடுகிறார்?⁾

5 ⁽உமது தீமை பெரிதல்லவா?␢ உமது கொடுமைக்கு முடிவில்லையா?⁾

6 ⁽ஏனெனில், அற்பமானவற்றுக்கும்␢ உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;␢ ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!⁾

7 ⁽தாகமுள்ளோர்க்குக்␢ குடிக்கத் தண்ணீர் தரவில்லை;␢ பசித்தோர்க்கு உணவு கொடுக்க␢ முன்வரவில்லை.⁾

8 ⁽வலிய மனிதராகிய உமக்கு␢ வையகம் சொந்தமாயிற்று;.␢ உம் தயவு பெற்றவர்க்கே␢ அது குடியிருப்பாயிற்று.⁾

9 ⁽விதவைகளை நீர்␢ வெறுங்கையராய் விரட்டினீர்;␢ .அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.⁾

10 ⁽ஆகையால்,␢ கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;␢ கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.⁾

11 ⁽நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;␢ நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.⁾

12 ⁽உயரத்தே விண்ணகத்தில்␢ கடவுள் இல்லையா?␢ வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்!␢ அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!⁾

13 ⁽ஆனால், நீர் சொல்கின்றீர்;␢ ‘இறைவனுக்கு என்ன தெரியும்?␢ கார்முகிலை ஊடுருவிப் பார்த்து␢ அவரால் தீர்ப்பிட முடியுமா?⁾

14 ⁽அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;␢ அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’.⁾

15 ⁽பாதகர் சென்ற பழைய நெறியில்␢ நீரும் செல்ல விழைகின்றீரோ!⁾

16 ⁽நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;␢ அவர்கள் அடித்தளத்தை␢ வெள்ளம் அடித்துச் சென்றது.⁾

17 ⁽அவர்கள் இறைவனிடம்,␢ ‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர்␢ எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர்.⁾

18 ⁽இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை␢ நம்மையினால் நிரப்பினார்; .␢ எனினும், தீயவரின் திட்டம்␢ எனக்குத் தொலைவாயிருப்பதாக!⁾

19 ⁽நேர்மையுள்ளோர் அதைக் கண்டு␢ மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்␢ அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;⁾

20 ⁽‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;␢ அவர்களின் சேமிப்பு␢ தீயால் விழுங்கப்பட்டது’␢ என்கின்றனர்.⁾

21 ⁽இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;␢ அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.⁾

22 ⁽அவர் வாயினின்று அறிவுரை பெறுக;␢ அவர்தம் மொழிகளை␢ உம் நெஞ்சில் பொறித்திடுக;⁾

23 ⁽நீர் எல்லாம் வல்லவரிடம்␢ திரும்பி வருவீராகில்,␢ நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை␢ உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!⁾

24 ⁽பொன்னைப் புழுதியிலே எறிந்து,␢ ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!⁾

25 ⁽எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,␢ வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.⁾

26 ⁽அப்போது எல்லாம் வல்லவரில்␢ நீர் நம்பிக்கை கொள்வீர்.␢ கடவுளைப் பார்த்து␢ உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.⁾

27 ⁽நீர் அவரிடம் மன்றாடுவீர்;␢ அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.⁾

28 ⁽நீர் நினைப்பது கைகூடும்;␢ உம் வழிகள் ஒளிமயமாகும்.⁾

29 ⁽ஏனெனில், அவர் செருக்குற்றோரின்␢ ஆணவத்தை அழிக்கின்றார்;␢ தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.⁾

30 ⁽குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;␢ அவர்கள் உம் கைகளின்␢ தூய்மையால் மீட்கப்படுவர்.⁾

Job 22 ERV IRV TRV