1 ⁽மீட்க இயலாதவாறு ஆண்டவரின்␢ கை குறுகிவிடவில்லை;␢ கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது␢ மந்தமாகி விடவில்லை.⁾

2 ⁽உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும்,␢ உங்கள் கடவுளுக்கும் இடையே␢ பிளவை உண்டாக்கியுள்ளன;␢ உங்கள் பாவங்களே␢ அவர் செவி சாய்க்காதவாறு␢ அவரது முகத்தை உங்களுக்கு␢ மறைத்துள்ளன.⁾

3 ⁽உங்கள் கைகள் இரத்தப்பழியால்␢ கறைபட்டுள்ளன;␢ உங்கள் விரல்கள் தீமையால்␢ தீட்டுப்பட்டுள்ளன.␢ உங்கள் உதடுகள்␢ பொய்களை உதிர்க்கின்றன;␢ உங்கள் நாக்கு␢ தீயவற்றை முணுமுணுக்கின்றது.⁾

4 ⁽நீதியான வழக்கைக் கொண்டு வருபவர்␢ எவரும் இல்லை;␢ உண்மையுடன் வழக்காடுபவர்␢ யாருமில்லை;␢ வெறுமையான வாதங்கள்மீது␢ நம்பிக்கை வைத்துப்␢ பொய்யைப் பேசி,␢ வஞ்சனையைக் கருத்தரித்துத்␢ தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.⁾

5 ⁽நச்சுப் பாம்பின் முட்டைகளை␢ அடைகாக்கிறார்கள்;␢ சிலந்திப் பூச்சியின் வலையைப்␢ பின்னுகிறார்கள்;␢ அவற்றின் முட்டைகளை விழுங்குபவர்␢ சாவார்;␢ உடைபடும் முட்டையிலிருந்து␢ கட்டுவிரியன் வெளிவரும்.⁾

6 ⁽அவற்றின் வலைகள்␢ உடையாகப் பயன்படா;␢ அவற்றின் வேலைப்பாடுகளைக்␢ கொண்டு எவரும் தம்மைப்␢ போர்த்துக்கொள்ளமாட்டார்;␢ அவர்களின் செயல்கள் தீயன;␢ அவர்களின் கையில் இருப்பன␢ வன்முறைச் செயல்களே!⁾

7 ⁽தீமை செய்ய அவர்கள் கால்கள்␢ விரைகின்றன;␢ குற்றமற்ற இரத்தம் சிந்த␢ அவர்கள் துடிக்கின்றனர்;␢ அவர்கள் எண்ணங்கள் தீயவை;␢ பாழாக்குதலும் அழிவுமே␢ அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.⁾

8 ⁽அமைதி வழியை அவர்கள் அறியார்;␢ நீதியின் பாதையில்␢ அவர்கள் நடக்கவில்லை;␢ தாங்கள் செல்லும் பாதைகளைக்␢ கோணலாக்கினர்;␢ அவற்றில் நடப்பவர் எவரும்␢ அமைதியை அறியார்.⁾

9 ⁽ஆதலால், நீதி எங்களுக்கு␢ வெகு தொலையில் உள்ளது;␢ நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை.␢ ஒளிக்கெனக் காத்திருந்தோம்;␢ காரிருள்தான் கிட்டியது;␢ விடியலை எதிர்பார்த்தோம்;␢ இருளிலேயே நடக்கின்றோம்;⁾

10 ⁽பார்வையற்றோரைப் போல்␢ சுவரைப்பிடிக்க␢ நாங்கள் தடவுகின்றோம்;␢ கண்ணில்லாதவரைப்போல்␢ எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்;␢ நண்பகலிலும் மங்கிய பொழுதிலும்␢ செத்தவர்போல் இருக்கின்றோம்.⁾

11 ⁽கரடியைப் போல் நாங்கள் யாவரும்␢ உறுமுகின்றோம்;␢ புறாக்களைப்போல் பெருமூச்சுடன்␢ விம்முகின்றோம்;␢ நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்,␢ ஒன்றையும் காணவில்லை;␢ விடுதலையை எதிர்பார்த்திருந்தோம்,␢ அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.⁾

12 ⁽உம் திருமுன் எங்கள் குற்றங்கள்␢ பெருகியுள்ளன;␢ எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச்␢ சான்று சொல்கின்றன;␢ எங்கள் குற்றங்கள் எங்களோடு தான்␢ இருக்கின்றன;␢ எங்கள் தீச்செயல்களை␢ நாங்களே அறிவோம்.⁾

13 ⁽ஆண்டவருக்கு எதிராகக்␢ கிளர்ச்சி செய்து␢ அவரை வஞ்சித்தோம்;␢ எங்கள் கடவுளைப் பின்பற்றாமல்␢ அகன்று போனோம்;␢ ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்␢ பற்றிப் பேசினோம்;␢ பொய்யானவற்றை மனதில் உருவாக்கி␢ அவற்றை மொழிந்தோம்.⁾

14 ⁽நீதி துரத்தப்பட்டது;␢ நேர்மை தொலையில் நின்றது;␢ பொது இடங்களில்␢ வாய்மை நிலைகுலைந்தது;␢ உண்மைக்கு அங்கே இடம் இல்லை.⁾

15 ⁽உண்மை என்பதே␢ இல்லாமல் போய்விட்டது;␢ தீமையினின்று விலகியவர்␢ சூறையாடப்படுகின்றார்;␢ ஆண்டவர் அதைக் கண்டார்;␢ அவர் பார்வையில் நீதியின்மை␢ தீயதாய்ப் பட்டது.⁾

16 ⁽இதில் தலையிட ஓர் ஆள்கூட␢ இல்லை என்று கண்டு␢ ஆண்டவர் திகைப்புற்றார்;␢ அவரது கையே அவருக்கு␢ வெற்றி கொணர்ந்து;␢ அவரது நேர்மையே␢ அவரைத் தாங்கி நின்றது.⁾

17 ⁽அவர் நேர்மையை மார்புக் கவசமாய்␢ அணிந்துகொண்டார்;␢ விடுதலையைத் தலைச்சீராவாய்த்␢ தம் தலையில் வைத்துக்கொண்டார்;␢ அநீதிக்குப் பழிவாங்குதலை␢ ஆடையாய் உடுத்திக் கொண்டார்;␢ அன்புவெறியை மேலாடையாகப்␢ போர்த்திக் கொண்டார்.⁾

18 ⁽தம் பகைவரின் செயல்களுக்குத்␢ தக்க கைம்மாறு அளிப்பார்;␢ அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்;␢ தம் எதிரிகளுக்குத்␢ தக்க தண்டனை வழங்குவார்;␢ தீவு நாடுகளுக்கும்␢ தகுந்த பதிலடி கொடுப்பார்.⁾

19 ⁽மேலை நாட்டினர்␢ ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;␢ கீழைநாட்டினர்␢ அவரது மாட்சிக்கு நடுங்குவர்;␢ ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர,␢ ஓடிவரும் ஆறென அவர் வருவார்.⁾

20 ⁽சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்;␢ யாக்கோபில் தீயதனின்று␢ திரும்பியவரிடம் வருவார்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

21 ⁽அவர்களுடன் நான் செய்து கொள்ளும்␢ உடன்படிக்கை இதுவே:␢ உன்மேல் இருக்கும் என் ஆவியும்␢ உன் வாயில் நான் வைத்துள்ள␢ என் வார்த்தைகளும்␢ உன் வாயினின்றும்␢ உன் வழி மரபினர் வாயினின்றும்␢ வழிவழிவரும் உன்␢ தலைமுறையினர் வாயினின்றும்␢ இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Isaiah 59 ERV IRV TRV