1 ⁽பிள்ளை பெறாத மலடியே,␢ மகிழ்ந்து பாடு;␢ பேறுகால வேதனை அறியாதவளே,␢ அக்களித்துப் பாடி முழங்கு;␢ ஏனெனில், கைவிடப்பட்டவளின்␢ பிள்ளைகள்␢ கணவனோடு வாழ்பவளின்␢ பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

2 ⁽உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு;␢ உன் குடியிருப்புகளின்␢ தொங்கு திரைகளைப் பரப்பிவிடு;␢ உன் கயிறுகளைத்␢ தாராளமாய் நீட்டி விடு;␢ உன் முளைகளை உறுதிப்படுத்து.⁾

3 ⁽வலப்புறமும் இடப்புறமும்␢ நீ விரிந்து பரவுவாய்;␢ உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை␢ உடைமையாக்கிக் கொள்வர்;␢ பாழடைந்து கிடக்கும் நகர்களிலும்␢ அவர்கள் குடியேற்றப்படுவர்.⁾

4 ⁽அஞ்சாதே,␢ நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்;␢ வெட்கி நாணாதே,␢ இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்;␢ உன் இளமையின் மானக்கேட்டை␢ நீ மறந்துவிடுவாய்;␢ உன் கைம்மையின் இழிநிலையை␢ இனி நினைக்கமாட்டாய்.⁾

5 ⁽ஏனெனில், உன்னை உருவாக்கியவரே␢ உன் கணவர்,␢ ‘படைகளின் ஆண்டவர்’ என்பது␢ அவர்தம் பெயராம்.␢ இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;␢ ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என␢ அவர் அழைக்கப்படுகின்றார்.⁾

6 ⁽ஏனெனில், கைவிடப்பட்டு␢ மனமுடைந்துபோன துணைவிபோலும்,␢ தள்ளப்பட்ட இளம் மனைவி போலும்␢ இருக்கும் உன்னை␢ ஆண்டவர் அழைத்துள்ளார்,␢ என்கிறார் உன் கடவுள்.⁾

7 ⁽நொடிப்பொழுதே␢ நான் உன்னைக் கைவிட்டேன்;␢ ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை␢ மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.⁾

8 ⁽பொங்கியெழும் சீற்றத்தால்␢ இமைப்பொழுதே என்முகத்தை␢ உனக்கு மறைத்தேன்;␢ ஆயினும் என்றுமுள பேரன்பால்␢ உனக்கு இரக்கம் காட்டுவேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

9 ⁽எனக்கு இது நோவாவின் நாள்களில்␢ நடந்ததுபோல் உள்ளது;␢ நோவாவின் காலத்துப் பெருவெள்ளம்␢ இனி மண்ணுலகின்மேல்␢ பாய்ந்து வராது என்று␢ நான் ஆணையிட்டேன்;␢ அவ்வாறே உம்மீதும்␢ சீற்றம் அடையமாட்டேன் என்றும்,␢ உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும்␢ ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.⁾

10 ⁽மலைகள் நிலை சாயினும்␢ குன்றுகள் இடம் பெயரினும்␢ உன்மீது நான் கொண்ட பேரன்போ␢ நிலை சாயாது;␢ என் சமாதான உடன்படிக்கையோ␢ அசைவுறாது, என்கிறார்␢ உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.⁾

11 ⁽துயருற்றவளே, சூறைக்காற்றால்␢ அலைக்கழிக்கப்பட்டவளே,␢ ஆறுதல் பெறாது தவிப்பவளே,␢ இதோ, மாணிக்கக்கற்களால்␢ உன் அடித்தளத்தை அமைப்பேன்,␢ நீலக்கற்களால் உன்␢ நிலைக்களத்தை நிறுவுவேன்.⁾

12 ⁽உன் கால்மாடங்களைச்␢ சிவப்புக் கற்களாலும்,␢ உன் வாயில்களைப்␢ பளிங்குக் கற்களாலும்␢ உன் மதில்கள் அனைத்தையும்␢ விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.⁾

13 ⁽உன் குழந்தைகள் அனைவருக்கும்␢ ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்;␢ உன் பிள்ளைகள்␢ நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.⁾

14 ⁽நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்;␢ ஒடுக்கப்பட்ட நிலை␢ உன்னைவிட்டு அகன்றுபோம்;␢ நீ அஞ்சாதே!␢ திகில் உன்னை அணுகாது.⁾

15 ⁽எவர்களாவது உன்னை␢ எதிர்த்துக் கூடினால் அவர்கள்␢ என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்;␢ உன்னைத் தாக்கவரும் எவனும்␢ உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.⁾

16 ⁽இதோ, கரிநெருப்பை ஊதிப்␢ போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப␢ உருவாக்கும் கொல்லனைப்␢ படைத்தவர் நான்;␢ அதைப் பாழாக்கி அழிப்பவனையும்␢ படைத்தவர் நான்.⁾

17 ⁽உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட␢ எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது.␢ உன்மேல் குற்றஞ்சாட்டித்␢ தீர்ப்புச் சொல்ல எழும்␢ எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்;␢ இவையே ஆண்டவரின் ஊழியர்களது␢ உரிமைச்சொத்தும்,␢ நான் அவர்களுக்கு அளிக்கும்␢ வெற்றியுமாய் இருக்கின்றன,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Isaiah 54 ERV IRV TRV