1 ⁽சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு␢ செய்துள்ளார்; பிற இனத்தாரை␢ அவர்முன் அடிபணியச் செய்வார்.␢ அரசர்களை அவர்முன்␢ ஆற்றல் இழக்கச் செய்வார்;␢ கோட்டை வாயில்களை அவர்முன்␢ பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்;␢ அவரது வலக்கையை உறுதியாகப்␢ பற்றிப் பிடித்துள்ளார்;␢ அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:⁾

2 ⁽நான் உனக்கு முன்னே சென்று␢ குன்றுகளைச் சமப்படுத்துவேன்;␢ செப்புக் கதவுகளை உடைத்து,␢ இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.⁾

3 ⁽இருளில் மறைத்துவைத்த␢ கருவூலங்களையும்␢ மறைவிடங்களில் ஒளித்துவைத்த␢ புதையல்களையும்␢ உனக்கு நான் தருவேன்;␢ பெயர் சொல்லி உன்னை அழைத்த␢ இஸ்ரயேலின் கடவுளாகிய␢ ஆண்டவர் நானே என்பதை␢ நீ அறியும்படி இதைச் செய்வேன்.⁾

4 ⁽என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும்␢ நான் தேர்ந்துகொண்ட␢ இஸ்ரயேல் பொருட்டும்␢ பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்;␢ நீ என்னை அறியாதிருந்தும்␢ உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.⁾

5 ⁽நானே ஆண்டவர்;␢ வேறு எவருமில்லை;␢ என்னையன்றி வேறு கடவுள் இல்லை;␢ நீ என்னை அறியாதிருந்தும்␢ உனக்கு வலிமை அளித்தேன்.⁾

6 ⁽கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி␢ மறையும் திசை வரை␢ என்னையன்றி␢ வேறு எவரும் இல்லை என்று␢ மக்கள் அறியும்படி␢ இதைச் செய்கிறேன்;␢ நானே ஆண்டவர்;␢ வேறு எவரும் இல்லை.⁾

7 ⁽நான் ஒளியை உண்டாக்குகிறேன்;␢ இருளைப் படைக்கிறேன்;␢ நல் வாழ்வை அமைப்பவன் நான்;␢ தீமையைப் படைப்பவனும் நானே;␢ இவை அனைத்தையும் செய்யும்␢ ஆண்டவர் நானே.⁾

8 ⁽வானங்கள், பனிமழையென␢ வெற்றியை அனுப்பட்டும்;␢ மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்;␢ மண்ணுலகம் வாய்திறந்து␢ விடுதலைக்கனி வழங்கட்டும்,␢ அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்;␢ இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.⁾

9 ⁽தன்னை உருவாக்கியவரை␢ எதிர்த்து வழக்காடுபவனுக்கு␢ ஐயோ கேடு!␢ பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே!␢ களிமண் குயவனிடம்,␢ ‘நீ என்னைக் கொண்டு␢ என்ன செய்கிறாய்’ என்றும்␢ அவன் வனைந்தது அவனிடம்,␢ ‘உனக்குக் கைத்திறனே இல்லை’␢ என்றும் கூறுவதுண்டோ?⁾

10 ⁽தந்தையிடம், ‘நீர் ஏன் என்னை␢ இப்படிப் பிறப்பித்தீர்’ என்றும்,␢ தாயிடம், ‘நீ ஏன் என்னை␢ இப்படிப் பெற்றெடுத்தாய்’ என்றும்␢ வினவுபவனுக்கு ஐயோ கேடு!⁾

11 ⁽இஸ்ரயேலின் தூயவரும்␢ அவனை உருவாக்கியவருமான␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “நிகழவிருப்பன குறித்தும்␢ என் மக்களைப்பற்றியும்␢ என்னிடம் கேள்வி கேட்பீர்களா?␢ என் கைவினை பற்றி␢ எனக்கே கட்டளையிடுவீர்களா?⁾

12 ⁽நான் உலகை உருவாக்கி␢ அதன்மேல் மனிதரைப் படைத்தேன்;␢ என் கைகளே வானத்தை விரித்தன;␢ அதன் படைத்திரளுக்கு␢ ஆணையிட்டதும் நானே.⁾

13 ⁽வெற்றிபெறுமாறு␢ நான் சைரசை எழுப்பினேன்;␢ அவன் செல்லும் அனைத்து␢ வழிகளையும் சீர்படுத்தினேன்;␢ அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்;␢ நாடு கடத்தப்பட்ட என் மக்களை␢ ஈட்டுப்பொருளோ␢ அன்பளிப்போ பெறாது␢ திருப்பி அனுப்புவான்” என்கிறார்␢ படைகளின் ஆண்டவர்.⁾

14 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “எகிப்தியர் தம் செல்வத்தோடும்,␢ எத்தியோப்பியர்␢ தம் வணிகப் பொருளோடும்␢ நெடிது வளர்ந்த செபாவியரும்␢ உனக்கு உடைமையாவர்.␢ அவர்கள் விலங்கிடப்பட்டு,␢ உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்;␢ உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து,␢ ‘இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்;␢ வேறெங்கும் இல்லை;␢ வேறு கடவுளும் இல்லை’ என்பார்கள்.⁾

15 ⁽மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே,␢ உண்மையிலேயே நீர்␢ ‘தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன்’.⁾

16 ⁽சிலைகளைச் செய்வோர் அனைவரும்␢ ஒருங்கே வெட்கி நாணினர்;␢ அவர்கள் குழம்பித் தவித்தனர்.⁾

17 ⁽ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து␢ இஸ்ரயேலை விடுவித்தருளினார்;␢ என்றென்றும் நீங்கள்␢ வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்;␢ அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள்.”⁾

18 ⁽ஏனெனில் விண்ணுலகைப் படைத்த␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ அவரே கடவுள்;␢ மண்ணுலகைப் படைத்து␢ உருவாக்கியவர் அவரே;␢ அதை நிலைநிறுத்துபவரும் அவரே;␢ வெறுமையாய் இருக்குமாறு படைக்காது,␢ மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.␢ நானே ஆண்டவர்,␢ என்னையன்றி வேறு எவரும் இல்லை.⁾

19 ⁽நான் மறைவிலும்␢ மண்ணுலகின் இருண்ட பகுதியிலும்␢ பேசியதில்லை;␢ ‘வெற்றிடத்தில்␢ என்னைத் தேடுங்கள்’ என்று␢ நான் யாக்கோபின் வழிமரபிடம்␢ சொல்லவில்லை;␢ ஆண்டவராகிய நான்␢ உண்மையே பேசுகிறேன்;␢ நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;⁾

20 ⁽மக்களினங்களுள்␢ தப்பிப் பிழைத்தோரே!␢ ஒன்று திரண்டு வாருங்கள்;␢ ஒருங்கே கூடுங்கள்;␢ மரத்தால் செய்த தங்கள் சிலையைச்␢ சுமந்து செல்வோருக்கும்,␢ விடுதலை வழங்காத தெய்வத்திடம்␢ தொடர்ந்து மன்றாடுவோருக்கும்␢ அறிவே இல்லை.⁾

21 ⁽அறிவியுங்கள்; உங்கள் வழக்கை␢ எடுத்துரையுங்கள்;␢ ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்;␢ தொடக்கத்திலிருந்து␢ இதை வெளிப்படுத்தியவர் யார்?␢ முதன் முதலில்␢ இதை அறிவித்தவர் யார்?␢ ஆண்டவராகிய நான் அல்லவா?␢ என்னையன்றிக் கடவுள்␢ வேறு எவரும் இல்லை;␢ நீதியுள்ளவரும்␢ மீட்பு அளிப்பவருமான இறைவன்␢ என்னையன்றி வேறு எவரும் இல்லை.⁾

22 ⁽மண்ணுலகின் அனைத்து␢ எல்லை நாட்டோரே!␢ என்னிடம் திரும்பி வாருங்கள்;␢ விடுதலை பெறுங்கள்;␢ ஏனெனில் நானே இறைவன்;␢ என்னையன்றி வேறு எவருமில்லை.⁾

23 ⁽நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்;␢ என் வாயினின்று நீதிநிறை வாக்கு␢ புறப்பட்டுச் சென்றது;␢ அது வீணாகத் திரும்பி வராது;␢ முழங்கால் அனைத்தும்␢ எனக்குமுன் மண்டியிடும்;␢ நா அனைத்தும்␢ என்மேல் ஆணையிடும்.⁾

24 ⁽‘ஆண்டவரில் மட்டும் எனக்கு␢ நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று␢ ஒவ்வொருவனும் சொல்லி␢ அவரிடம் வருவான்;␢ அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர்␢ அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.⁾

25 ⁽இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும்␢ ஆண்டவரால்␢ ஏற்புடையோராகப் பெற்று␢ அவரைப் போற்றுவர்.⁾

Isaiah 45 ERV IRV TRV