1 ⁽யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்␢ இஸ்ரயேலே, உன்னை␢ உருவாக்கிய வருமான ஆண்டவர்␢ இப்போது இவ்வாறு கூறுகிறார்:␢ அஞ்சாதே, நான் உன்னை␢ மீட்டுக் கொண்டேன்;␢ உன் பெயரைச் சொல்லி␢ உன்னை அழைத்தேன்;␢ நீ எனக்கு உரியவன்.⁾

2 ⁽நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது␢ நான் உன்னோடு இருப்பேன்;␢ ஆறுகளைக் கடந்து போகும்போது␢ அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா;␢ தீயில் நடந்தாலும்␢ சுட்டெரிக்கப்பட மாட்டாய்;␢ நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.⁾

3 ⁽ஏனெனில் உன் கடவுளாகிய␢ ஆண்டவர் நானே;␢ இஸ்ரயேலின் தூயவரும்␢ உன்னை விடுவிப்பவரும் நானே;␢ உனக்குப் பணயமாக எகிப்தையும்,␢ உனக்கு ஈடாக எத்தியோப்பியா,␢ செபா நாடுகளையும்␢ ஒப்புக்கொடுக்கிறேன்.⁾

4 ⁽என் பார்வையில் நீ␢ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்;␢ நான் உன்மேல் அன்பு கூர்கிறேன்,␢ ஆதலால் உனக்குப் பதிலாக␢ மானிடரையும்␢ உன் உயிருக்கு மாற்றாக␢ மக்களினங்களையும் கொடுக்கிறேன்.⁾

5 ⁽அஞ்சாதே, ஏனெனனில்␢ நான் உன்னோடு இருக்கின்றேன்;␢ கிழக்கிலிருந்து உன் வழிமரபை␢ அழைத்து வருவேன்;␢ மேற்கிலிருந்து உன்னை␢ ஒன்று திரட்டுவேன்.⁾

6 ⁽வடபுறம் நோக்கி,␢ ‘அவர்களை விட்டுவிடு’ என்பேன்.␢ தென்புறத்திடம் ‘தடுத்து நிறுத்தாதே’␢ என்று சொல்வேன்.␢ “தொலைநாட்டிலிருந்து␢ என் புதல்வரையும்␢ உலகின் எல்லையிலிருந்து␢ என் புதல்வியரையும்␢ அழைத்து வா.⁾

7 ⁽என் மாட்சிக்காக நான் படைத்த,␢ உருவாக்கிய, உண்டாக்கிய␢ என் பெயரால் அழைக்கப்பெற்ற␢ அனைவரையும் கூட்டிக்கொண்டுவா!”.⁾

8 ⁽கண்ணிருந்தும் குருடராய்,␢ காதிருந்தும் செவிடராய் இருக்கும்␢ மக்களைப் புறப்பட்டு வரச்செய்.⁾

9 ⁽வேற்றினத்தார் அனைவரும்␢ ஒருங்கே திரண்டு வரட்டும்;␢ மக்களினங்கள் ஒன்று கூடட்டும்;␢ அவர்களுள் யார்␢ அதை முன்னறிவிக்கக்கூடும்?␢ முன்பு நடந்தவற்றை யாரால்␢ விளக்கக் கூடும்?␢ அவர்கள் கூறுவது சரியெனக் காட்டத்␢ தம் சான்றுகளைக் கொண்டு வரட்டும்;␢ மக்கள் அதைக்கேட்டு␢ ‘உண்மை’ என்று சொல்லட்டும்.⁾

10 ⁽“நீங்கள் என் சாட்சிகள்”␢ என்கிறார் ஆண்டவர்;␢ ‘நான் தேர்ந்தெடுத்த␢ என் ஊழியனும் நீங்களே;␢ என்னை அறிந்து என்மீது␢ நம்பிக்கை வைப்பீர்கள்;␢ ‘நானே அவர்’ என்பதை␢ உணர்ந்து கொள்வீர்கள்;␢ எனக்கு முன் எந்தத் தெய்வமும்␢ உருவாக்கப்படவில்லை;␢ எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.⁾

11 ⁽நான், ஆம், நானே ஆண்டவர்;␢ என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.⁾

12 ⁽அறிவித்தது, விடுதலை அளித்தது,␢ பறைசாற்றியது அனைத்தும் நானே;␢ உங்களிடையே உள்ள␢ வேறு தெய்வமன்று;␢ நீங்களே என் சாட்சிகள்,␢ என்கிறார் ஆண்டவர்!⁾

13 ⁽நானே இறைவன்;␢ எந்நாளும் இருப்பவரும் நானே;␢ என் கையிலிருப்பதைப்␢ பறிப்பவர் எவருமில்லை;␢ நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?⁾

14 ⁽இஸ்ரயேலின் தூயவரும்␢ உங்கள் மீட்பருமான␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ உங்கள் பொருட்டுப்␢ பாபிலோனுக்கு ஆள்களை அனுப்பி,␢ அதன் தாழ்ப்பாள்கள் அனைத்தையும்␢ தகர்த்துவிடுவேன்;␢ கல்தேயரின் மகிழ்ச்சிப் பாடல்␢ புலம்பலாக மாறும்.⁾

15 ⁽நானே உங்கள் தூயவரான ஆண்டவர்;␢ இஸ்ரயேலைப் படைத்தவர்;␢ உங்கள் அரசர்.⁾

16 ⁽கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும்,␢ பொங்கியெழும் நீர்நடுவே␢ பாதை அமைத்தவரும்,⁾

17 ⁽தேர்களையும், குதிரைகளையும்,␢ படைவீரரையும், வலிமைமிக்கோரையும்␢ ஒன்றாகக் கூட்டி வந்தவரும்,␢ அவர்கள் எழாதவாறு விழச்செய்து,␢ திரிகளை அணைப்பதுபோல்␢ அவர்களை அழித்தவருமாகிய␢ ஆண்டவர் கூறுவது இதுவே.⁾

18 ⁽முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்;␢ முற்கால நிகழ்ச்சிபற்றிச்␢ சிந்திக்காதிருங்கள்;⁾

19 ⁽இதோ புதுச்செயல் ஒன்றை␢ நான் செய்கிறேன்;␢ இப்பொழுதே அது தோன்றிவிட்டது;␢ நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா?␢ பாலைநிலத்தில் நான்␢ பாதை ஒன்று அமைப்பேன்;␢ பாழ்வெளியில் நீரோடைகளைத்␢ தோன்றச் செய்வேன்.⁾

20 ⁽காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்;␢ குள்ள நரிகளும், தீக்கோழிகளும்␢ என்னைப் பெருமைப்படுத்தும்;␢ ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட␢ என் மக்களுக்குப் பாலைநிலத்தில்␢ குடிக்கக் கொடுப்பேன்;␢ பாழ்நிலத்தில்␢ நீரோடைகள் தோன்றச் செய்வேன்.⁾

21 ⁽எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள்␢ என் புகழை எடுத்துரைப்பர்.⁾

22 ⁽ஆனால் யாக்கோபே,␢ நீ என்னை நோக்கி மன்றாடவில்லை;␢ இஸ்ரயேலே,␢ என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே!⁾

23 ⁽ஆடுகளை எரிபலிக்கென␢ நீ என்னிடம் கொண்டு வரவில்லை;␢ உன் பலிகளால் நீ என்னைப்␢ பெருமைப்படுத்தவில்லை;␢ உணவுப்படையல் படைக்குமாறு␢ நான் உங்களிடம் கேட்கவில்லை;␢ தூபம் காட்டுமாறு␢ உன்னை வற்புறுத்தவில்லை.⁾

24 ⁽பணம் கொடுத்து நீ எனக்கென்று␢ நறுமணப்படையல் வாங்கவில்லை;␢ உன் பலிகளின் கொழுப்பால்␢ என்னை நிறைவு செய்யவில்லை;␢ மாறாக, உன் பாவங்களால்␢ என்னைத் தொல்லைப்படுத்தினாய்;␢ உன் தீச்செயல்களால்␢ என்னைச் சலிப்புறச் செய்தாய்.⁾

25 ⁽நான், ஆம், நானே, உன் குற்றங்களை␢ என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்;␢ உன் பாவங்களை␢ நினைவிற் கொள்ள மாட்டேன்.⁾

26 ⁽கடந்ததை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள்.␢ ஒருமிக்க நாம் வழக்காடுவோம்;␢ நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை␢ நிலைநாட்டுவதற்கானவற்றை␢ எடுத்துரையுங்கள்.⁾

27 ⁽உன் முதல் தந்தை பாவம் செய்தான்;␢ உனக்காகப் பேசுவோரும்␢ எனக்கெதிராய்க் குற்றம் புரிந்துள்ளனர்.⁾

28 ⁽உன் தலைவர்கள் என் திருத்தூயகத்தைத்␢ தீட்டுப்படுத்தினார்கள்;␢ ஆதலால் யாக்கோபை அழிவுக்கும்␢ இஸ்ரயேலைப் பழிப்புரைக்கும்␢ உள்ளாக்கினேன்.⁾

Isaiah 43 ERV IRV TRV