1 ⁽“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக்␢ கனிமொழி கூறுங்கள்” என்கிறார்␢ உங்கள் கடவுள்.⁾

2 ⁽எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி,␢ உரத்த குரலில்␢ அவளுக்குச் சொல்லுங்கள்;␢ அவள் போராட்டம் நின்றுவிட்டது;␢ அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது;␢ அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும்␢ ஆண்டவர் கையில்␢ இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.⁾

3 ⁽குரலொலி ஒன்று முழங்குகின்றது;␢ பாலைநிலத்தில் ஆண்டவருக்காக␢ வழியை ஆயத்தமாக்குங்கள்;␢ பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக␢ நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.⁾

4 ⁽பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்;␢ மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்;␢ கோணலானது நேராக்கப்படும்;␢ கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.⁾

5 ⁽ஆண்டவரின் மாட்சி␢ வெளிப்படுத்தப்படும்;␢ மானிடர் அனைவரும்␢ ஒருங்கே இதைக் காண்பர்;␢ ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.⁾

6 ⁽“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்;␢ “எதை நான்␢ உரக்கக் கூற வேண்டும்?” என்றேன்.␢ “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்;␢ அவர்களின் மேன்மை␢ வயல்வெளிப் பூவே!⁾

7 ⁽ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே,␢ புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்;␢ உண்மையில் மானிடர் புல்லே ஆவர்!⁾

8 ⁽புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்;␢ நம் ஆண்டவரின் வார்த்தையோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்.⁾

9 ⁽சீயோனே! நற்செய்தி தருபவளே,␢ உயர்மலைமேல் நின்றுகொள்!␢ எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே!␢ உன் குரலை எழுப்பு, அஞ்சாதே!␢ ‘இதோ உன் கடவுள்’ என்று␢ யூதா நகர்களிடம் முழங்கு!⁾

10 ⁽இதோ என் தலைவராகிய ஆண்டவர்␢ ஆற்றலுடன் வருகின்றார்;␢ அவர் ஆற்றலோடு␢ ஆட்சி புரிய இருக்கிறார்.␢ அவர்தம் வெற்றிப் பரிசைத்␢ தம்முடன் எடுத்து வருகின்றார்;␢ அவர் வென்றவை␢ அவர்முன் செல்கின்றன.⁾

11 ⁽ஆயனைப்போல் தம் மந்தையை␢ அவர் மேய்ப்பார்;␢ ஆட்டுக்குட்டிகளைத்␢ தம் கையால் ஒன்று சேர்ப்பார்;␢ அவற்றைத் தம் தோளில்␢ தூக்கிச் சுமப்பார்;␢ சினையாடுகளைக்␢ கவனத்துடன் நடத்திச் செல்வார்.”⁾

12 ⁽கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால்␢ கணக்கிட்டவர் யார்?␢ வானத்தைச் சாண் அளவால்␢ கணித்திட்டவர் யார்?␢ மண்ணுலகின் புழுதியை␢ மரக்காலால் அளந்தவர் யார்?␢ மலைகளை நிறைகோலாலும்␢ குன்றுகளைத் தராசாலும்␢ நிறுத்தவர் யார்?⁾

13 ⁽ஆண்டவரின் ஆவிக்கு␢ வழிகாட்டியவர் யார்?␢ அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து␢ கற்றுத்தந்தவர் யார்?⁾

14 ⁽யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்?␢ அவருக்குப் பயிற்சி அளித்து,␢ நீதிநெறியை உணர்த்தியவர் யார்?␢ அவருக்கு அறிவு புகட்டி,␢ விவேக நெறியைக் காட்டியவர் யார்?⁾

15 ⁽இதோ, வேற்றினத்தார்,␢ வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும்,␢ தராசில் ஒட்டிய தூசாகவும்␢ அவரால் கருதப்படுகின்றனர்.␢ இதோ, தீவுகளை ஓர் அணுவென␢ அவர் தூக்குகின்றார்.⁾

16 ⁽எரிப்பதற்கு லெபனோன் போதாது;␢ எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.⁾

17 ⁽மக்களினங்கள் யாவும் இல்லாமையாக,␢ ஒன்றுமில்லாமையாக, வெறுமையாக␢ அவரால் கருதப்படுகின்றன.⁾

18 ⁽இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?␢ எந்தச் சாயலை அவருக்கு␢ நிகராகக் கொள்வீர்கள்?⁾

19 ⁽சிலை வடிவத்தையா?␢ அதைச் சிற்பி வார்க்கிறான்;␢ பொற்கொல்லன் அதைப்␢ பொன்னால் வேய்கிறான்;␢ வெள்ளிச் சங்கிலிகளை␢ அதற்கென அமைக்கிறான்.⁾

20 ⁽இத்தகைய நேர்ச்சையை␢ நிறைவேற்ற இயலா வறியவன்␢ உளுத்துப்போகா மரத்தைத்␢ தேர்ந்து கொள்கிறான்;␢ அசைக்க முடியாச்␢ சிலையொன்றை நிறுவ அவன்␢ கைவினைஞனைத் தேடுகிறான்.⁾

21 ⁽உங்களுக்குத் தெரியாதா?␢ நீங்கள் கேள்விப்படவில்லையா?␢ தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு␢ அறிவிக்கப்படவில்லையா?␢ மண்ணுலகின் அடித்தளங்கள்␢ இடப்பட்டதுபற்றி நீங்கள்␢ அறிந்து கொள்ளவில்லையா?⁾

22 ⁽உலகின் விதானத்தின் மீது␢ வீற்றிருப்பவர் அவரே;␢ மண்ணில் வாழ்வோர்␢ வெட்டுக்கிளி போல்வர்;␢ வான் வெளியைத்␢ திரைச் சீலையென விரித்துக்␢ குடியிருக்கும் கூடாரம்போல்␢ அதை அமைப்பவரும் அவரே.⁾

23 ⁽ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே;␢ மண்ணுலகின் தலைவர்களை␢ ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.⁾

24 ⁽அவர்கள் நடப்படுகிறார்கள்;␢ விதைக்கப்படுகிறார்கள்;␢ ஆனால் அவர்களின் தண்டு␢ நிலத்தில் வேர்விடுவதற்குள்,␢ அவர்கள்மேல் அவர் ஊத,␢ அவர்கள் வாடிவதங்குகின்றனர்.␢ சூறைக்காற்று அவர்களைத்␢ துரும்பென அடித்துச் செல்கிறது.⁾

25 ⁽‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?␢ எனக்கு நிகரானவர் யார்?’␢ என்கிறார் தூயவர்.⁾

26 ⁽உங்கள் கண்களை உயர்த்தி␢ மேலே பாருங்கள்;␢ அவற்றைப் படைத்தவர் யார்?␢ வான் படையை எண்ணிக்கை வாரியாய்␢ வெளிக்கொணர்ந்து␢ ஒவ்வொன்றையும்␢ பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ?␢ அவர் ஆற்றல்மிக்கவராயும்␢ வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால்␢ அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.⁾

27 ⁽“என் வழி ஆண்டவருக்கு␢ மறைவாய் உள்ளது;␢ என் நீதி என் கடவுளுக்குப்␢ புலப்படவில்லை” என்று␢ யாக்கோபே, நீ செல்வது ஏன்?␢ இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?⁾

28 ⁽உனக்குத் தெரியாதா?␢ நீ கேட்டதில்லையா?␢ ஆண்டவரே என்றுமுள கடவுள்;␢ அவரே மண்ணுலகின்␢ எல்லைகளைப் படைத்தவர்;␢ அவர் சோர்ந்து போகார்;␢ களைப்படையார்;␢ அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.⁾

29 ⁽அவர் சோர்வுற்றவருக்கு␢ வலிமை அளிக்கின்றார்;␢ வலிமையிழந்தவரிடம்␢ ஊக்கம் பெருகச் செய்கின்றார்.⁾

30 ⁽இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்;␢ வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.⁾

31 ⁽ஆண்டவர்மேல்␢ நம்பிக்கை வைத்திருப்பவர்களோ␢ புதிய ஆற்றல் பெறுவர்.␢ கழுகுகள்போல் இறக்கை விரித்து␢ உயரே செல்வர்;␢ அவர்கள் ஓடுவர்; களைப்படையார்;␢ நடந்து செல்வர்; சோர்வடையார்.⁾

Isaiah 40 ERV IRV TRV