1 ⁽அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு␢ பெண்கள் பிடித்துக்கொண்டு,␢ ‟நாங்கள் எங்கள் சொந்த உணவை␢ உண்டு வாழ்வோம்;␢ எங்கள் சொந்த ஆடைகளை␢ உடுத்திக்கொள்வோம்;␢ உமது பெயரை மட்டும்␢ எங்களுக்கு வழங்கி எங்கள்␢ இழிவை நீக்குவீராக” என்பார்கள்.⁾

2 ⁽அந்நாளில் ஆண்டவரால்␢ துளிர்க்கும் தளிர்,␢ அழகும் மேன்மையும்␢ வாய்ந்ததாய் இருக்கும்;␢ நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,␢ இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்␢ பெருமையும் மேன்மையுமாய் அமையும்.⁾

3 ⁽அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும்,␢ எருசலேமில் தப்பி வாழ்வோரும்␢ ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்;␢ உயிர் பிழைப்பதற்கென்று␢ எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும்␢ ‛புனிதர்’ எனப்படுவர்.⁾

4 ⁽என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக்␢ கழுவித் தூய்மைப்படுத்துவார்;␢ நீதியின்படி தீர்ப்பிடும்␢ அவரது தன்மையாலும்␢ நெருப்புத்தணலையொத்த␢ அவரது ஆற்றலாலும்␢ எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி␢ அதனைத் தூய்மைப்படுத்துவார்.⁾

5 சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும்.

6 அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

Isaiah 4 ERV IRV TRV