1 ⁽துணை வேண்டி எகிப்துக்குச்␢ செல்வோருக்கு ஐயோ கேடு!␢ அவர்கள் குதிரைகளுக்காகக்␢ காத்துக் கிடக்கின்றன‌ர்;␢ பெரும் தேர்ப்படைகளையும்␢ வலிமைமிகு குதிரை வீரர்களையும்␢ நம்பியிருக்கிறார்கள்;␢ இஸ்ரயேலின் தூயவருக்காக␢ ஆவலுடன் காத்திருக்கவில்லை;␢ ஆண்டவரைத் தேடுவதுமில்லை;⁾

2 ⁽ஆனால் அவரோ ஞானமுடையவர்;␢ தீங்கை வருவிப்பவர்;␢ தம் வார்த்தைகளின் இலக்கை␢ மாற்றாதவர்;␢ தீயோர் வீட்டார்க்கும்␢ கொடியவருக்கு உதவுவோருக்கும்␢ எதிராகக் கிளர்ந்தெழுபவர்.⁾

3 ⁽எகிப்தியர் வெறும் மனிதரே,␢ இறைவன் அல்லர்;␢ அவர்கள் குதிரைகள் வெறும்␢ தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல;␢ ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது␢ உதவி செய்பவன் இடறுவான்;␢ உதவி பெறுபவன் வீழ்வான்;␢ அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.⁾

4 ⁽ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:␢ சிங்கமோ இளஞ்சிங்கமோ␢ தன் இரைமேல் பாய்ந்து␢ கர்ச்சிக்கும் போது␢ மேய்ப்பர் கூட்டம்␢ தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால்␢ திகிலடைவதில்லை;␢ அவர்கள் ஆரவாரத்தைப்␢ பொருட்படுத்துவதில்லை.␢ அதுபோல் படைகளின் ஆண்டவர்␢ சீயோன் மலைமேலும்␢ அதன் குன்றின்மேலும்␢ போர்புரிய இறங்கி வருவார்.⁾

5 ⁽பறக்கும் பறவைகள்போல்␢ படைகளின் ஆண்டவர்␢ எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்;␢ அதைப் பாதுகாத்து விடுவிப்பார்;␢ தண்டிக்காமல் தப்புவிப்பார்.⁾⒫

6 இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள்.

7 அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.

8 ⁽“அசீரியன் வாளால் வீழ்வான்;␢ ஆனால் மனிதரின் வாளாலன்று;␢ அவனை வாள் விழுங்கிவிடும்;␢ ஆனால் அது மனிதரின் வாளன்று;␢ அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்;␢ அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.⁾

9 ⁽அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்;␢ அவன் தலைவர்␢ கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார்,␢ சீயோனில் தீப்பிழம்பையும்␢ எருசலேமில் தீச்சூளையையும்␢ கொண்ட ஆண்டவர்.⁾

Isaiah 31 ERV IRV TRV