1 ⁽தாவீது பாசறை அமைத்த நகராகிய␢ அரியேல்!* அரியேல்! உனக்கு␢ ஐயோ கேடு!␢ ஆண்டிற்குப்பின் ஆண்டு␢ கடந்து வரட்டும்;␢ விழாக்கள் முறைமுறையாய்␢ வந்து போகட்டும்.⁾

2 ⁽அரியேலுக்கு நான்␢ இடுக்கண் விளைவிப்பேன்;␢ அங்கு அழுகையும் புலம்பலும்␢ நிறைந்திருக்கும்;␢ அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.⁾

3 ⁽உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்;␢ உன்னைப் போர்க் கோபுரங்களால்␢ சூழ்ந்து வளைப்பேன்;␢ உனக்கெதிராய்␢ முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.⁾

4 ⁽தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்;␢ நலிந்த உன் குரல்␢ புழுதியிலிருந்து எழும்பும்;␢ உன் குரல்,␢ இறந்தவன் ஆவியின் ஒலிபோல,␢ மண்ணிலிருந்து வெளிவரும்;,␢ உன் பேச்சு␢ புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.⁾

5 ⁽உன் பகைவனின் திரள்␢ நுண்ணிய தூசிபோல் இருக்கும்;␢ கொடியவர் கூட்டம்␢ “பறக்கும் பதர் போலிருக்கும்;␢ இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.⁾

6 ⁽இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல்,␢ சூறாவளி, புயல்காற்று விழுங்கும்␢ நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால்␢ படைகளின் ஆண்டவர்␢ உன்னைத் தண்டிப்பார்.⁾

7 ⁽அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும்␢ திரளான வேற்றினத்தார் அனைவரும்␢ அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப்␢ போரிட்டு␢ அதைத் துன்புறுத்திய அனைவரும்␢ கனவு போலும், கனவில் காணும்␢ காட்சிபோலும் மறைவர்.⁾

8 ⁽பசியாய் இருப்பவர் உண்பதாய்க்␢ கனவு கண்டு விழித்தெழுந்து␢ வெறும் வயிற்றினராய்␢ வாடுவது போலும்,␢ தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க்␢ கனாக்கண்டு விழித்தெழுந்து␢ தீராத்தாகத்தால் தவிப்பது போலும்,␢ சீயோன் மலைமேல் போர் தொடுக்கும்␢ திரளான வேற்றினத்தார்␢ அனைவரும் ஆவர்.⁾

9 ⁽திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்;␢ குருடரைப்போல் இருங்கள்;␢ பார்வையற்றவராகுங்கள்.␢ ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல;␢ தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.⁾

10 ⁽ஏனெனில் ஆழ்ந்த␢ தூக்கம் தரும் ஆவியை␢ ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்;␢ இறைவாக்கினராகிய␢ உங்கள் கண்களை மூடியுள்ளார்;␢ திருக்காட்சியாளராகிய␢ உங்கள் பார்வையை மறைத்துள்ளார்.⁾

11 ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர்“என்னால் இயலாது; இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.

12 எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து “இதைப் படியும்” என்றால் அவர் “எனக்குப் படிக்கத்தெரியாதே” என்பார்.⒫

13 ⁽என் தலைவர் கூறுவது இதுவே:␢ வாய்ச் சொல்லால் இம்மக்கள்␢ என்னை அணுகுகின்றனர்;␢ உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;␢ அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத்␢ தொலையில் இருக்கிறது;␢ அவர்களது இறையச்சம்␢ மனனம் செய்த வெறும்␢ மனித கட்டளையைச் சார்ந்ததே!⁾

14 ⁽ஆதலால், இதோ நான்␢ இந்த மக்களுக்காக␢ மீண்டும் வியத்தகு செயல் புரிவேன்.␢ அது விந்தைக்கு மேல்␢ விந்தையாக இருக்கும்.␢ அவர்களுடைய ஞானிகளின்␢ ஞானம் அழிந்துபோம்;␢ அவர்களுடைய அறிஞர்களின்␢ அறிவு மறைந்துபோம்.⁾

15 ⁽ஆண்டவரிடமிருந்து␢ தங்கள் திட்டங்களை␢ மனத்தின் ஆழங்களில்␢ மறைத்துக்கொண்டு,␢ தங்கள் செயல்களை இருளில் செய்து,␢ “நம்மை எவர் காணப்போகின்றார்?␢ நம்மை எவர் அறியப் போகின்றார்?”␢ எனச் சொல்வோருக்கு ஐயோ␢ கேடு!⁾

16 ⁽நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன?␢ குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ?␢ கைவேலை தன்␢ கைவினைஞனை நோக்கி␢ “நீர் என்னை உருவாக்கவில்லை”␢ என்று கூறலாமோ?␢ வனையப்பட்டது␢ தன்னை வனைந்தவனை நோக்கி␢ “உமக்கு அறிவில்லை” என்று␢ சொல்லலாமோ?⁾

17 ⁽இன்னும் சிறிது காலத்தில் லெபனோன்␢ வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ?␢ வளம் மிகு நிலம்␢ காடாக ஆகிவிடுமன்றோ?⁾

18 ⁽அந்நாளில் காது கேளாதோர்␢ ஏட்டுச் சுருளின்␢ வார்த்தைகளைக் கேட்பர்;␢ பார்வையற்றோரின் கண்கள்␢ காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும்␢ விடுதலையாகிப் பார்வை பெறும்.⁾

19 ⁽ஒடுக்கப்பட்டோர் மீண்டும்␢ ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;␢ மானிடரில் வறியவர்␢ இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.⁾

20 ⁽கொடியோர் இல்லாதொழிவர்;␢ இகழ்வோர் இல்லாமற் போவர்;␢ தீமையில் நாட்டம் கொள்வோர்␢ அழிந்து போவர்.⁾

21 ⁽அவர்கள் ஒருவர்மேல்␢ பொய்க் குற்றம் சாட்டி,␢ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை␢ இடறச் செய்கின்றனர்;␢ பொய் புனைந்து நேர்மையாளரின்␢ வழக்கைப் புரட்டுகின்றனர்.⁾

22 ⁽ஆதலால்␢ ஆபிராகாமை மீட்ட ஆண்டவர்␢ யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது:␢ இனி யாக்கோபு␢ மானக்கேடு அடைவதில்லை;␢ அவன் முகம் இனி␢ வெளிறிப் போவதுமில்லை.⁾

23 ⁽அவன் பிள்ளைகள் என் பெயரைத்␢ தூயதெனப் போற்றுவர்;␢ நான் செய்யவிருக்கும் என்␢ கைவேலைப்பாடுகளைக் காணும்போது␢ யாக்கோபின் தூயவரைத்␢ தூயவராகப் போற்றுவர்;␢ இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.⁾

24 ⁽தவறிழைக்கும் சிந்தை கொண்டோர்␢ உணர்வடைவர்; முறுமுறுப்போர்␢ அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.⁾

Isaiah 29 ERV IRV TRV