1 ⁽எப்ராயிமின் குடிவெறியரின் மாண்பு␢ மிகு மணிமுடிக்கு ஐயோ கேடு!␢ வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு␢ எழில் குலைகின்றதே!␢ பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே!␢ நறுமணம் பூசிய தலைவர்கள்␢ மது மயக்கத்தால்␢ வீழ்ந்து கிடக்கின்றனரே!⁾

2 ⁽இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன்␢ என் தலைவரிடம் உள்ளான்;␢ அவன் கல்மழையென,␢ அழிக்கும் புயலென,␢ கரை புரண்டோடும்␢ பெருவெள்ளமென வந்து,␢ தன் கைவன்மையால்␢ அதைத் தரையில் வீழ்த்துவான்.⁾

3 ⁽எப்ராயிம் குடிவெறியரின்␢ மாண்புமிகு மணிமுடி␢ கால்களால் மிதிக்கப்படும்.⁾

4 ⁽வாடுகின்ற மலராய் அதன்␢ மேன்மை மிகு எழில் குலைகின்றது;␢ நறுமணம் பூசிய தலைவர்கள்␢ வீழ்ந்து கிடக்கின்றனர்;␢ இது கோடைக்காலம் வரும் முன்␢ பழுத்த அத்திப்பழம் போலாகும்;␢ அதைக் காண்பவன்␢ தன் கைக்கு எட்டியதும்␢ அதை விழுங்கி விடுவான்.⁾

5 ⁽அந்நாளில் படைகளின் ஆண்டவரே,␢ தம் மக்களுள் எஞ்சியோருக்கு␢ எழில்மிகு மணிமுடியாகவும்␢ மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.⁾

6 ⁽நீதி வழங்க அமர்வோனுக்கு␢ நீதியின் உணர்வாகவும்␢ நகரவாயிலைத் தாக்குவோர்␢ புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு␢ ஆற்றலாகவும் அவர் இருப்பார்.⁾

7 ⁽குருக்களும் இறைவாக்கினரும்␢ திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்;␢ மதுவால் தள்ளாடுகின்றனர்;␢ அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்;␢ திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்;␢ மதுவால் மயங்குகின்றனர்;␢ காட்சி காணுகையில் மருள்கின்றனர்;␢ நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!⁾

8 ⁽மேசைகள் எல்லாம்␢ வாந்தியால் நிறைந்துள்ளன;␢ அழுக்குப் படியாத இடமே இல்லை!⁾

9 ⁽“இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்?␢ யாருக்குச் செய்தியைப்␢ புரியுமாறு எடுத்துரைப்பான்?␢ பால்குடி மறந்தோர்க்கா?␢ தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?⁾

10 ⁽ஏனெனில் கட்டளை மேல் கட்டளை,␢ கட்டளை மேல் கட்டளை;␢ அளவு நூலுக்குமேல் அளவுநூல்,␢ அளவு நூலுக்கு மேல் அளவுநூல்;␢ இங்கே கொஞ்சம்,␢ அங்கே கொஞ்சம்” என்கின்றனர்.⁾

11 ⁽ஆனால் குழறிய பேச்சும்␢ புரியாத மொழியும் கொண்டோர் மூலம்␢ ஆண்டவர் இம்மக்களுக்குப்␢ பாடம் கற்பிப்பார்.⁾

12 ⁽“இதோ உள்ளது இளைப்பாற்றி;␢ களைத்தவன் இளைப்பாறட்டும்;␢ இதோ உள்ளது இளைப்பாற்றி” என்று␢ அவர்களுக்குச் சொன்னாலும்␢ செவி கொடுக்க மாட்டார்கள்.⁾

13 ⁽ஆதலால் ஆண்டவரின் வார்த்தை␢ அவர்களுக்குக்␢ கட்டளைமேல் கட்டளையாகவும்␢ அளவுநூல்மேல் அளவு நூலாகவும்␢ இங்கே கொஞ்சம்␢ அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்;␢ அவர்கள் புறப்பட்டுச்செல்கையில்␢ நிலை தடுமாறி வீழ்வர்;␢ நொறுக்கப்படுவர்;␢ கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.⁾

14 ⁽ஆதலால், எருசலேமிலுள்ள␢ இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே!␢ ஆண்டவரின்␢ வார்த்தையைக் கேளுங்கள்.⁾

15 ⁽“நாங்கள் சாவோடு ஓர்␢ உடன்படிக்கை செய்துள்ளோம்;␢ பாதாளத்துடன் ஓர்␢ உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம்.␢ பகைவன் பெருவெள்ளமெனப்␢ பாய்ந்துவந்தாலும்␢ அவனால் எங்களை அணுக இயலாது.␢ ஏனெனில், பொய்மையை நாங்கள்␢ எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்;␢ வஞ்சகத்தை எங்களுக்கு␢ மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்”␢ என்று சொன்னீர்கள்.⁾

16 ⁽ஆதலால், ஆண்டவராகிய␢ என் தலைவர் கூறுவது இதுவே;␢ இதோ! சீயோனில் நான்␢ ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்;␢ அது பரிசோதிக்கப்பட்ட கல்;␢ விலையுயர்ந்த மூலைக்கல்;␢ உறுதியான அடித்தளமாய் அமையும் கல்;␢ “நம்பிக்கை கொண்டோன்␢ பதற்றமடையான்.”⁾

17 ⁽நீதியை அளவு நூலாகவும்,␢ நேர்மையைத் தூக்கு நூலாகவும்␢ அமைப்பேன்.␢ பொய்மை எனும் புகலிடத்தைக்␢ கல்மழை அழிக்கும்;␢ மறைவிடத்தைப்␢ பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.⁾

18 ⁽சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை␢ முறிந்து போகும்;␢ பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு␢ நிலைத்து நிற்காது;␢ பகைவன் பெருவெள்ளமெனப்␢ பாய்ந்து வரும்போது␢ நீங்கள் அவனால்␢ நசுக்கப்படுவீர்கள்.⁾

19 ⁽பகை உங்களைக்␢ கடக்கும் பொழுதெல்லாம்␢ உங்களை வாரிக்கொண்டு போகும்;␢ அது காலைதோறும்,␢ பகலும் இரவும், பாய்ந்து வரும்;␢ அச்செய்தியை உணர்வதே␢ மிகவும் திகிலூட்டும்.⁾

20 ⁽கால் நீட்டப் படுக்கையின்␢ நீளம் போதாது;␢ போர்த்திக் கொள்ளப்␢ போர்வையின் அகலம் பற்றாது.⁾

21 ⁽ஆண்டவர் பெராசிம் மலைமேல்␢ கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்!␢ கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல்␢ செயலாற்றக் கொதித்தெழுவார்!␢ தம் பணியை நிறைவேற்றுவார்!␢ விந்தையானது அவர் தம் செயல்!␢ புதிரானது அவர்தம் பணி!⁾

22 ⁽உங்கள் தளைகள் கடினமாகாதபடி␢ இகழ்வதை விட்டுவிடுங்கள்;␢ ஏனெனில் நாடு முழுவதையும்␢ அழித்தொழிக்குமாறு␢ படைகளின் ஆண்டவராகிய␢ என் தலைவர் இட்ட ஆணையை␢ நான் கேட்டேன்.⁾

23 ⁽செவி கொடுங்கள்;␢ நான் கூறுவதைக் கேளுங்கள்;␢ செவிசாய்த்து நான் சொல்வதைக்␢ கவனியுங்கள்;⁾

24 ⁽விதைப்பதற்கென உழுபவர்கள்␢ நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா?␢ நிலத்தை நாள்தோறும் கிளறிப்␢ பரம்படிப்பார்களா?⁾

25 ⁽அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின்␢ உளுந்தைத் தூவிச் சீரகத்தை␢ விதைப்பார்களன்றோ?␢ வாற்கோதுமையைக் கோதுமைப்␢ பாத்திகளிலும்,␢ தானியங்களை ஓரங்களில்␢ உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?⁾

26 ⁽இந்த நடைமுறையை அவர்கள்␢ கற்றுக் கொள்கின்றார்கள்;␢ அவர்களின் கடவுள் அவர்களுக்குக்␢ கற்றுத் தருகின்றார்;⁾

27 ⁽உளுந்து இருப்புக் கோலால்␢ அடிக்கப்படுவதில்லை;␢ சீரகத்தின் மேல் வண்டி உருளை␢ உருட்டப்படுவதில்லை;␢ ஆனால் உளுந்து கோலாலும்␢ சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.⁾

28 ⁽உணவுக்கான தானியத்தை யாரும்␢ நொறுக்குவார்களா? இல்லை;␢ அதை அவர்கள் இடைவிடாது␢ போரடிப்பதில்லை.␢ வண்டி உருளையையும் குதிரையையும்␢ அதன்மேல் ஓட்டும்போது,␢ அதை அவர்கள் நொறுக்குவதில்லை.⁾

29 ⁽படைகளின் ஆண்டவரிடமிருந்து␢ இந்த அறிவு வருகின்றது;␢ அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்;␢ செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.⁾

Isaiah 28 ERV IRV TRV