1 ⁽மோவாபைப் பற்றிய திருவாக்கு:␢ ஒரே இரவில் ஆர் நகரம்␢ அழிக்கப்படுவதால்␢ மோவாபும் அழிக்கப்படும்.␢ ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால்,␢ மோவாபும் அழிக்கப்படும்.⁾

2 ⁽தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப␢ உயர்ந்த இடங்களுக்கு␢ ஏறிச் செல்கின்றனர்;␢ நெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து␢ மோவாபு அலறி அழுகின்றது;␢ அவர்கள் அனைவரின் தலைகளும்␢ மழிக்கப்பட்டாயிற்று.␢ தாடிகள் அனைத்தும்␢ சிரைக்கப்பட்டதாயிற்று.⁾

3 ⁽அதன் தெருக்களில் நடமாடுவோர்␢ சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;␢ வீட்டு மாடிகளிலும்␢ பொது இடங்களிலும் உள்ள யாவரும்␢ ஓலமிட்டு அழுகின்றனர்.␢ விழிநீர் ததும்பிவழியத்␢ தேம்பித் தேம்பி அழுகின்றனர்.⁾

4 ⁽எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர்␢ கூக்குரலிடுகின்றனர்.␢ யாகசு ஊர்வரை␢ அவர்களின் குரல் கேட்கின்றது;␢ படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள்␢ கதறுகின்றார்கள்,␢ ஒவ்வொருவனும் மனக்கலக்கம்␢ அடைகிறான்.⁾

5 ⁽மோவாபுக்காக என் நெஞ்சம்␢ குமுறுகின்றது;␢ அதன் அகதிகள் சோவாருக்கும்␢ எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்;␢ ஏனெனில் அவர்கள்␢ லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில்␢ அழுதுகொண்டு செல்கின்றனர்;␢ ஒரோனயிம் சாலையில்␢ அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்;⁾

6 ⁽நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;␢ புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;␢ பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.⁾

7 ⁽ஆதலால் தாங்கள்␢ மிகுதியாக ஈட்டியவற்றையும்␢ சேமித்து வைத்தவற்றையும்␢ தூக்கிக் கொண்டு அவர்கள்␢ அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.⁾

8 ⁽மோவாபின் எல்லையெங்கும்␢ கதறியழும் குரல் எட்டுகின்றது;␢ அவர்களின் அவலக்குரல்␢ எக்லயிம் நகர்வரை கேட்கின்றது;␢ அவர்களின் புலம்பல்␢ பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.⁾

9 ⁽தீபோன் நீர்நிலைகள்␢ இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன;␢ ஆயினும் தீபோன் மேல்␢ இன்னும் மிகுதியான § துன்பத்தைக் கொண்டு வருவேன்;␢ மோவாபியருள்␢ தப்பிப் பிழைத்தோர்மேலும்␢ நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும்␢ சிங்கத்தை ஏவிவிடுவேன்.⁾

Isaiah 15 ERV IRV TRV