1 ⁽ஆமோட்சின் மகன் எசாயா␢ பாபிலோனைக் குறித்துக் கண்ட␢ காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:⁾

2 ⁽வறண்ட மலை ஒன்றில்␢ போர்க்கொடி ஏற்றுங்கள்;␢ போர்வீரர்களை␢ உரக்கக் கூவி அழையுங்கள்;␢ உயர்குடி மக்கள் வாழும்␢ நகர வாயில்களுக்குள் நுழையும்படி,␢ அவர்களுக்குக் கையசைத்துச்␢ சைகை காட்டுங்கள்.⁾

3 ⁽போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள␢ என் வீரர்களுக்கு,␢ நானே ஆணை பிறப்பித்துள்ளேன்;␢ நான் சினமடைந்து பிறப்பித்துள்ள␢ என் கட்டளையை நிறைவேற்றிட,␢ தங்கள் வலிமையால்␢ பெருமிதம் கொள்ளும்␢ என் வீரர்களை அழைத்துள்ளேன்.⁾

4 ⁽மலைகளின் மேல் எழும்␢ பேரிரைச்சலைக் கேளுங்கள்;␢ அது பெருங்கூட்டமாய் வரும்␢ மக்களின் ஆரவாரம்;␢ அரசுகளின் ஆர்ப்பாட்டக்␢ குரலைக் கேளுங்கள்,␢ பிற இனத்தார் ஒருங்கே␢ திரண்டு விட்டனர்;⁾

5 ⁽தொலைநாட்டிலிருந்தும்␢ தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்␢ அவர்கள் வருகின்றார்கள்;␢ ஆண்டவர் தம் கடும்சினத்தின்␢ போர்க் கலன்களோடு␢ உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.⁾

6 ⁽அழுது புலம்புங்கள்,␢ ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;␢ எல்லாம் வல்லவரிடமிருந்து␢ அழிவு வடிவத்தில் அது வருகின்றது.⁾

7 ⁽ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;␢ மானிட நெஞ்சம் அனைத்தும்␢ உருகி நிற்கும்.⁾

8 ⁽அவர்கள் திகிலடைவார்கள்;␢ துன்ப துயரங்கள்␢ அவர்களைக் கவ்விக்கொள்ளும்;␢ பேறுகாலப் பெண்ணைப்போல␢ வேதனையடைவார்கள்;␢ ஒருவர் மற்றவரைப் பார்த்துத்␢ திகைத்து நிற்பர்;␢ கோபத் தீயால் அவர்கள் முகம்␢ கனன்று கொண்டிருக்கும்.⁾

9 ⁽இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது,␢ கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும்␢ நிறைந்த நாள் அது;␢ மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும்␢ நாள் அது;␢ அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும்␢ அழித்துவிடும் நாள் அது.⁾

10 ⁽வானத்து விண்மீன்களும்␢ இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா;␢ தோன்றும்போதே கதிரவன்␢ இருண்டு போவான்;␢ வெண்ணிலாவும் தண்ணொளியைத்␢ தந்திடாது.⁾

11 ⁽உலகை அதன் தீச்செயலுக்காகவும்␢ தீயோரை அவர்தம்␢ கொடுஞ் செயலுக்காகவும்␢ நான் தண்டிப்பேன்;␢ ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்;␢ அச்சுறுத்துவோரின் இறுமாப்பை␢ அடக்குவேன்.⁾

12 ⁽மானிடரைப் பசும் பொன்னைவிடவும்␢ மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும்␢ அரிதாக்குவேன்.⁾

13 ⁽ஆதலால், வானத்தை␢ நடுங்கச் செய்வேன்;␢ மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து␢ ஆட்டங் கொடுக்கும்;␢ படைகளின் ஆண்டவரது கோபத்தால்␢ அவரது கடும்சினத்தின் நாளில்␢ இது நடக்கும்.⁾

14 ⁽துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும்,␢ ஒன்று சேர்ப்பாரின்றிச்␢ சிதறுண்டு ஆடுகளைப் போலவும்,␢ எல்லாரும் தம் மக்களிடம்␢ திரும்பிச் செல்வர்;␢ எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத்␢ தப்பியோடுவர்.⁾

15 ⁽அகப்பட்ட ஒவ்வொருவரும்␢ பிடிபட்ட ஒவ்வொருவரும்␢ வாளால் மடிவர்.⁾

16 ⁽அவர்கள் பச்சிளம் குழந்தைகள்␢ அவர்கள் கண்ணெதிரே␢ மோதியடிக்கப்படுவர்.␢ அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்,␢ அவர்கள் துணைவியர்␢ மானபங்கப்படுத்தப்படுவர்.⁾

17 ⁽இதோ, அவர்களுக்கு எதிராக நான்␢ மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன்,␢ அவர்கள் வெள்ளியைப்␢ பெரிதாக எண்ணாதவர்கள்;␢ பொன்னை அடைவதற்கு␢ ஆவல் கொள்ளாதவர்கள்.⁾

18 ⁽அவர்கள் வில்வீரர்␢ இளைஞரை மோதியடிப்பார்கள்,␢ பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள்␢ கருணை காட்டமாட்டார்கள்;␢ சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில்␢ இரக்கம் இராது.⁾

19 ⁽அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின்␢ மேன்மையும் பெருமையுமான பாபிலோன்␢ கடவுள் அழித்த சோதோம்␢ கொமோராவைப்போல ஆகிவிடும்.⁾

20 ⁽இனி எவரும் அதில்␢ ஒருபோதும் குடியிருக்க மாட்டார்;␢ அதுவும் தலைமுறை தலைமுறையாகக்␢ குடியற்று இருக்கும்;␢ அரேபியர் அங்கே␢ கூடாரம் அமைக்கமாட்டார்;␢ ஆயர்கள் தம் மந்தையை அங்கே␢ இளைப்பாற விடுவதில்லை.⁾

21 ⁽ஆனால், காட்டு விலங்குகள்␢ அங்கே படுத்துக் கிடக்கும்;␢ ஊளையிடும் குள்ளநரிகள்␢ அவர்கள் வீடுகளை நிரப்பும்;␢ தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்;␢ வெள்ளாட்டுக் கிடாய்கள்␢ அங்கே துள்ளித் திரியும்.⁾

22 ⁽அவர்கள் கோட்டைகளில்␢ ஓநாய்கள் அலறும்;␢ அரண்மனைகளில்␢ குள்ளநரிகள் ஊளையிடும்;␢ அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது;␢ அதற்குரிய நாள்கள்␢ அண்மையில் உள்ளன.⁾

Isaiah 13 ERV IRV TRV