1 ⁽ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து␢ தளிர் ஒன்று துளிர்விடும்;␢ அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று␢ வளர்ந்து கனிதரும்.⁾

2 ⁽ஆண்டவரின் ஆவி␢ அவர்மேல் தங்கியிருக்கும்;␢ ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன்,␢ ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய␢ அச்ச உணர்வு — இவற்றை␢ அந்த ஆவி அவருக்கு அருளும்.⁾

3 ⁽அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில்␢ மகிழ்ந்திருப்பார்.␢ கண் கண்டதைக் கொண்டு மட்டும்␢ அவர் நீதி வழங்கார்;␢ காதால் கேட்டதைக் கொண்டு மட்டும்␢ அவர் தீர்ப்புச் செய்யார்;⁾

4 ⁽நேர்மையோடு ஏழைகளுக்கு␢ நீதி வழங்குவார்;␢ நடுநிலையோடு நாட்டின்␢ எளியோரது வழக்கை விசாரிப்பார்;␢ வார்த்தை எனும் கோலினால்␢ கொடியவரை அடிப்பார்;␢ உதட்டில் எழும் மூச்சினால்␢ தீயோரை அழிப்பார்.⁾

5 ⁽நேர்மை அவருக்கு அரைக்கச்சை;␢ உண்மை அவருக்கு இடைக்கச்சை.⁾

6 ⁽அந்நாளில், ஒநாய்␢ செம்மறியாட்டுக் குட்டியோடு␢ தங்கியிருக்கும்;␢ அக்குட்டியோடு சிறுத்தைப் புலி␢ படுத்துக் கொள்ளும்.␢ கன்றும், சிங்கக்குட்டியும்,␢ கொழுத்த காளையும் கூடி வாழும்;␢ பச்சிளம் குழந்தை அவற்றை␢ நடத்திச் செல்லும்.⁾

7 ⁽பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;␢ அவற்றின் குட்டிகள் சேர்ந்து␢ படுத்துக்கிடக்கும்;␢ சிங்கம் மாட்டைப் போல்␢ வைக்கோல் தின்னும்;⁾

8 ⁽பால் குடிக்கும் குழந்தை␢ விரியன் பாம்பின் வளையில்␢ விளையாடும்;␢ பால்குடி மறந்த பிள்ளை␢ கட்டுவிரியன் வளையினுள்␢ தன் கையை விடும்.⁾

9 ⁽என் திருமுலை முழுவதிலும்␢ தீமை செய்வார் எவருமில்லை;␢ கேடு விளைவிப்பார் யாருமில்லை;␢ ஏனெனில், கடல் தண்ணீரால்␢ நிறைந்திருக்கிறது போல,␢ மண்ணுலகம் ஆண்டவராம்␢ என்னைப் பற்றிய␢ அறிவால் நிறைந்திருக்கும்.⁾

10 ⁽அந்நாளில், மக்களினங்களுக்குச்␢ சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப்␢ பிறஇனத்தார் தேடி வருவார்கள்;␢ அவர் இளைப்பாறும் இடம்␢ மாட்சி நிறைந்ததாக இருக்கும்.⁾

11 ⁽அந்நாளில், என் தலைவர்␢ மீண்டும் தம் கையை நீட்டி,␢ அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம்,␢ எத்தியோப்பியா, ஏலாம், சினார்,␢ ஆமாத்து முதலிய நாடுகளிலும்,␢ கடல் தீவுகளிலும் வாழும்␢ தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத்␢ தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.⁾

12 ⁽பிற இனத்தாருக்கென␢ ஒரு கொடியை ஏற்றி வைப்பார்;␢ இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை␢ ஒன்று திரட்டுவார்;␢ யூதாவில் சிதறுண்டு போனவர்களை␢ உலகின் நாற்புறத்திலிருந்தும்␢ கூட்டிச் சேர்ப்பார்.⁾

13 ⁽எப்ராயிமரின் பொறாமை␢ அவர்களை விட்டு நீங்கும்,␢ யூதாவைப் பகைத்தோர்␢ வெட்டி வீழ்த்தப்படுவர்.␢ எப்ராயிமர் யூதாமேல்␢ பொறாமை கொள்வதில்லை;␢ யூதாவும் எப்ராயிமரைப்␢ பகைப்பதில்லை.⁾

14 ⁽அவர்கள் இருவரும் சேர்ந்து␢ மேற்கிலுள்ள பெலிஸ்தியரின்␢ தோள்மேல் பாய்வார்கள்;␢ கீழ்த்திசை நாட்டினரைக்␢ கொள்ளையடிப்பார்கள்;␢ ஏதோமையும் மோவாபையும்␢ கைப்பற்றிக் கொள்வார்கள்;␢ அம்மோன் மக்கள்␢ அவர்களுக்கு அடிபணிவார்கள்.⁾

15 ⁽எகிப்தின் கடல் முகத்தை␢ ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்;␢ பேராற்றின்மேல் கையசைத்து␢ அனல்காற்று வீசச்செய்வார்;␢ கால் நனையாமல் மக்கள்␢ கடந்து வரும்படி அந்த ஆற்றை␢ ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.⁾

16 ⁽இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து␢ வந்த நாளில்␢ பெருவழி தோன்றியது போல,␢ ஆண்டவரின் மக்களுள்␢ எஞ்சியோர் வருவதற்கு␢ அசீரியாவிலிருந்து␢ பெருவழி ஒன்று தோன்றும்.⁾

Isaiah 11 ERV IRV TRV