1 ⁽எக்காளத்தை ஊது!␢ கழுகு ஒன்று ஆண்டவருடைய␢ வீட்டின்மேல் பாய்ந்து வருகின்றது;␢ அவர்கள் என் உடன்படிக்கையை␢ மீறினார்கள்;␢ என் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.⁾

2 ⁽இஸ்ரயேலர் என்னை நோக்கிக்␢ கூக்குரலிட்டு,␢ “எங்கள் கடவுளே,␢ நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்”␢ என்று சொல்கின்றார்கள்.⁾

3 ⁽இஸ்ரயேலரோ␢ நலமானதை வெறுத்து விட்டார்கள்;␢ பகைவன் அவர்களைத் துரத்துவான்.⁾

4 ⁽அவர்கள் தாங்களே அரசர்களை␢ ஏற்படுத்திக் கொண்டார்கள்;␢ அது என்னாலே அன்று;␢ அவர்களே தலைவர்களை␢ நியமித்துக் கொண்டார்கள்;␢ அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன்.␢ தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும்␢ தங்களுக்கெனச்␢ சிலைகளைச் செய்தார்கள்;␢ தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.⁾

5 ⁽சமாரியா மக்கள் வழிபடும்␢ கன்றுக்குட்டியை␢ நான் வெறுக்கின்றேன்;␢ என் கோபத்தீ␢ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது.␢ இன்னும் எத்துணைக் காலம்␢ அவர்கள் தூய்மையடையாது␢ இருப்பார்கள்?⁾

6 ⁽அந்தக் கன்றுக்குட்டி␢ இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ!␢ அது கடவுளல்லவே!␢ கைவினைஞன் ஒருவன்தானே␢ அதைச் செய்தான்!␢ சமாரியாவின் கன்றுக்குட்டி␢ தவிடுபொடியாகும்.⁾

7 ⁽அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்;␢ கடும்புயலை அறுப்பார்கள்.␢ வளரும் பயிர் முற்றுவதில்லை;␢ கோதுமை நன்றாக விளைவதில்லை;␢ அப்படியே விளைந்தாலும்␢ அந்நியரே அதை விழுங்குவர்.⁾

8 ⁽இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று;␢ இப்பொழுது அவர்கள்␢ வேற்றினத்தார் நடுவில்␢ உதவாத பாத்திரம்போல்␢ இருக்கின்றார்கள்.⁾

9 ⁽அவர்கள் தனிமையில் திரிகிற␢ காட்டுக் கழுதைபோல்␢ அசீரியாவைத் தேடிப் போனார்கள்.␢ எப்ராயிம் மக்கள்␢ தங்கள் காதலர்க்குப்␢ பொருள் கொடுத்து வருகிறார்கள்.⁾

10 ⁽கைக்கூலி கொடுத்து␢ வேற்றினத்தாரை␢ அவர்கள் துணைக்கு␢ அமர்த்திக் கொண்டாலும்,␢ இப்பொழுதே நான்␢ அவர்களையும் சேர்த்துச் சிதறடிப்பேன்.*␢ தலைவர்கள் ஏற்படுத்திய␢ மன்னன் சுமத்தும் சுமையில்␢ சிறிது காலம் துயருறுவார்கள்.⁾

11 ⁽எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே␢ பலிபீடங்கள் பல செய்துகொண்டான்;␢ அப்பீடங்களே அவன்␢ பாவம் செய்வதற்குக் காரணமாயின.⁾

12 ⁽ஆயிரக்கணக்கில் நான்␢ திருச்சட்டங்களை␢ எழுதிக் கொடுத்தாலும்,␢ அவை நமக்கில்லை என்றே␢ அவர்கள் கருதுவார்கள்.⁾

13 ⁽பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்;␢ பலி கொடுத்து, அந்த␢ இறைச்சியையும் உண்ணுகிறார்கள்;␢ அவற்றின்மேல்␢ ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை;␢ அதற்கு மாறாக,␢ அவர்கள் தீச்செயல்களை␢ நினைவில் கொள்கின்றார்;␢ அவர்கள் செய்த பாவங்களுக்குத்␢ தண்டனை வழங்குவார்;␢ அவர்களோ எகிப்து நாட்டிற்குத்␢ திரும்புவார்கள்.⁾

14 ⁽இஸ்ரயேல்␢ தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டு␢ அரண்மனைகளைக் கட்டினான்;␢ யூதாவோ அரண்சூழ் நகர்கள்␢ பலவற்றை எழுப்பினான்;␢ நானோ அவனுடைய நகர்கள்மேல்␢ நெருப்பை அனுப்புவேன்;␢ அவனுடைய அரண்களை␢ அது பொசுக்கிவிடும்.⁾

Hosea 8 ERV IRV TRV