1 ⁽குருக்களே, இதைக் கேளுங்கள்;␢ இஸ்ரயேல் குடும்பத்தாரே,␢ கவனியுங்கள்;␢ அரசனின் வீட்டாரே,␢ செவி கொடுங்கள்;␢ உங்களுக்கு எதிராகவே␢ தீர்ப்புத் தரப்படுகின்றது;␢ நீங்கள் மிஸ்பாவில்␢ ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்;␢ தாபோர்மீது விரிக்கப்பட்ட␢ வலையுமாயிருக்கின்றீர்கள்.⁾

2 ⁽வஞ்சகர்கள் கொலைத் தொழிலில்␢ ஆழ்ந்துள்ளார்கள்;␢ அவர்கள் அனைவரையும்␢ தண்டிப்பேன்.⁾

3 ⁽எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்;␢ இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று;␢ எப்ராயிமே! நீ வேசித்தனத்தில்␢ ஈடுபட்டிருக்கின்றாய்;␢ இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;⁾

4 ⁽அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர␢ அவர்களின் செயல்கள் விடுவதில்லை;␢ ஏனெனில், விபசாரப் புத்தி␢ அவர்களை ஆட்கொண்டுள்ளது;␢ ஆண்டவரைப்பற்றிய அறிவு␢ அவர்களுக்கில்லை.⁾

5 ⁽இஸ்ரயேலின் இறுமாப்பு␢ அவனுக்கு எதிராகச் சான்று கூறும்;␢ இஸ்ரயேலும் எப்ராயிமும்␢ தங்கள் தீச்செயலால்␢ இடறிவிழுவார்கள்;␢ யூதாவும் அவர்களோடு␢ இடறிவிழுவான்.⁾

6 ⁽தங்கள் ஆடு மாடுகளோடு␢ அவர்கள் ஆண்டவரைத்␢ தேடிப் போவார்கள்;␢ ஆனால் அவரைக் காணமாட்டார்கள்;␢ அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.⁾

7 ⁽ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம்␢ செய்தார்கள்; ஏனெனில்␢ அன்னியப் பிள்ளைகளைப்␢ பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும்␢ அவர்கள் நிலங்களையும்␢ அமாவாசை விழுங்கப் போகிறது.⁾

8 ⁽கிபயாவில் கொம்பு ஊதுங்கள்;␢ இராமாவில் எக்காளம் முழக்குங்கள்;␢ பெத்தாவேனில் போர்க்குரல்␢ எழுப்புங்கள்;␢ பென்யமின்! உன்னைப்␢ பின் தொடருகின்றார்கள்.⁾

9 ⁽தண்டனை வழங்கப்படும் நாளில்␢ எப்ராயிம் பாழாவான்;␢ இஸ்ரயேலின் குலங்களுக்கு␢ உறுதியாய் நேரிடப் போவதையே␢ அறிவிக்கின்றேன்.⁾

10 ⁽யூதாவின் தலைவர்கள்␢ எல்லைக்கல்லைத் தள்ளி␢ வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்;␢ அவர்கள் மேல் என் கோபத்தை␢ வெள்ளப்பெருக்கைப்போல்␢ கொட்டித் தீர்ப்பேன்.⁾

11 ⁽எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்;␢ தண்டனைத் தீர்ப்பால்␢ நொறுக்கப்படுகின்றான்;␢ அவன் வீணான கட்டளைகளைப்␢ பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.⁾

12 ⁽ஆகையால் எப்ராயிமுக்கு␢ நான் விட்டில்போல் இருக்கின்றேன்;␢ யூதாவின் வீட்டாருக்குப்␢ புற்றுநோய்போல் இருக்கின்றேன்.⁾

13 ⁽எப்ராயிம் தன் பிணியைக்␢ கண்டுகொண்டான்;␢ யூதா தன் காயத்தை␢ உணர்ந்து கொண்டான்;␢ எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி,␢ யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான்.␢ ஆனால், உங்களைக் குணமாக்கவோ,␢ உங்கள் காயங்களை ஆற்றவோ␢ அவனால் இயலாது.⁾

14 ⁽ஏனெனில், நான் எப்ராயிமுக்குச்␢ சிங்கத்தைப் போலவும்,␢ யூதாவின் வீட்டாருக்குச்␢ சிங்கக்குட்டியைப்போலவும்␢ இருப்பேன்;␢ நான், நானே அவர்களைக்␢ கவ்விப் பிடிப்பேன்;␢ தூக்கிக்கொண்டு போவேன்;␢ விடுவிப்பவன் எவனுமே இரான்.⁾

15 ⁽தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று,␢ என்னைத் தேடி வரும்வரை,␢ நான் என் இடத்திற்குத்␢ திரும்பிப் போய்விடுவேன்.␢ தங்கள் துன்பத்திலே அவர்கள்␢ என்னைத் தேடுவார்கள்.⁾

Hosea 5 ERV IRV TRV