1 ⁽இஸ்ரயேல் மக்களே,␢ ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;␢ நாட்டில் குடியிருப்பவர்களோடு␢ ஆண்டவருக்கு␢ வழக்கு ஒன்று உண்டு;␢ நாட்டில் உண்மையும் இல்லை,␢ இரக்கமும் இல்லை;␢ கடவுளை அறியும் அறிவும் இல்லை.⁾

2 ⁽பொய்யாணை, பொய்யுரை, கொலை,␢ களவு, விபசாரம் ஆகியன␢ பெருகிவிட்டன.␢ எல்லாக் கட்டுப்பாடுகளையும்␢ தகர்த்தெறிகின்றனர்;␢ இரத்தப் பழிமேல் இரத்தப்பழி␢ குவிகின்றது.⁾

3 ⁽ஆதலால் நாடு புலம்புகின்றது;␢ அதில் குடியிருப்பன எல்லாம்␢ நலிந்து போகின்றன;␢ காட்டு விலங்குகளும்,␢ வானத்துப் பறவைகளும்,␢ கடல்வாழ் மீன்களும்கூட␢ அழிந்து போகின்றன.⁾

4 ⁽ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்;␢ எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்;␢ *உன் மக்கள் குருவோடு␢ வழக்காடுகிறவர்களைப்␢ போலிருக்கிறார்கள்.*⁾

5 ⁽பகலிலே நீ இடறி விழுவாய்;␢ இரவிலே இறைவாக்கினனும்␢ உன்னோடு இடறி விழுவான்;␢ உன் தாயை நான் அழித்துவிடுவேன்.⁾

6 ⁽அறிவின்மையால் என் மக்கள்␢ அழிகின்றார்கள்;␢ நீ அறிவைப் புறக்கணித்தாய்;␢ நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி␢ உன்னை புறக்கணிப்பேன்.␢ நீ உன் கடவுளின்␢ திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்;␢ நானும் உன் மக்களை␢ மறந்து விடுவேன்.⁾

7 ⁽எவ்வளவுக்கு அவர்கள்␢ பலுகினார்களோ அவ்வளவுக்கு␢ அவர்கள் எனக்கு எதிராயப்␢ பாவம் செய்தார்கள்;␢ அவர்கள் மேன்மையை␢ இகழ்ச்சியாக மாற்றுவேன்.⁾

8 ⁽என் மக்களின் பாவங்களால்␢ இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்;␢ அவர்கள் தீச்செயல் செய்யும்படி␢ இவர்கள் ஏங்குகின்றார்கள்.⁾

9 ⁽குருவுக்கு நேரிடுவது␢ மக்களுக்கும் நேரிடும்;␢ அவர்களுடைய தீய வழிகளுக்காகத்␢ தண்டனை வழங்குவேன்;␢ அவர்களுடைய செயல்களுக்கேற்ற␢ பதிலை அளிப்பேன்.⁾

10 ⁽அவர்கள் உண்டாலும்␢ நிறைவடைய மாட்டார்கள்;␢ வேசித்தனம் செய்தாலும்␢ பலுகமாட்டார்கள்;␢ ஏனெனில்,␢ வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக␢ ஆண்டவரைக் கைவிட்டார்கள்.⁾

11 ⁽மதுவும், திராட்சை இரசமும்␢ அறிவைக் கெடுக்கும்.⁾

12 ⁽என் மக்கள் மரக்கட்டையிடம்␢ குறி கேட்கின்றனர்;␢ அவர்களது கோல்␢ மறைமொழிகள் கூறுகின்றது!␢ விபசாரப் புத்தி அவர்களை␢ நெறிதவறச் செய்தது;␢ விபசாரம் செய்வதற்காக அவர்கள்␢ தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.⁾

13 ⁽மலையுச்சிகளில் அவர்கள்␢ பலியிடுகின்றார்கள்;␢ குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும்␢ கருவாலி, புன்னை, தேவதாரு␢ ஆகிய மரங்களின் கீழும்␢ நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்;␢ ஆதலால் உங்கள் புதல்வியர்␢ வேசித்தனம் செய்கின்றார்கள்;␢ உங்கள் மருமக்கள்␢ விபசாரம் புரிகின்றார்கள்.⁾

14 ⁽உங்கள் புதல்வியர்␢ விபசாரம் செய்தாலும்,␢ உங்கள் மருமக்கள்␢ விபசாரம் புரிந்தாலும்,␢ நான் அவர்களைத்␢ தண்டிக்கமாட்டேன்;␢ ஏனெனில், ஆண்கள்␢ விலைமாதரோடு போகின்றார்கள்;␢ தேவதாசிகளோடு சேர்ந்து␢ பலி செலுத்துகின்றார்கள்;␢ அறிவற்ற அம்மக்கள்␢ அழிந்து போவார்கள்.⁾

15 ⁽இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும்,␢ யூதா நாடாகிலும்␢ குற்றமற்றதாய் இருக்கட்டும்;␢ கில்காலுக்குள் நுழையாதீர்கள்;␢ பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்;␢ “ஆண்டவர்மேல் ஆணை” என்று␢ ஆணையிடாதீர்கள்.⁾

16 ⁽கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல␢ இஸ்ரயேல் மக்கள்␢ பிடிவாதமாயிருக்கின்றார்கள்;␢ ஆண்டவர் அவர்களைப்␢ பரந்த புல்வெளியில்␢ ஆட்டுக் குட்டியைப் போல்␢ மேய்க்க முடியுமா?⁾

17 ⁽எப்ராயிம் சிலைகளோடு␢ சேர்ந்து கொண்டான்.␢ அவனை விட்டுவிடு.⁾

18 ⁽குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள்␢ வேசித்தனத்தில்␢ ஆழ்ந்திருக்கின்றார்கள்;␢ தங்களது மேன்மையைக் காட்டிலும்␢ இகழ்ச்சியையே அவர்கள்␢ மிகுதியாய் விரும்புகின்றார்கள்.⁾

19 ⁽காற்று அவர்களைத் தன்␢ இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்;␢ அவர்கள் தங்கள் பலிகளால்␢ நாணமடைவார்கள்.⁾

Hosea 4 ERV IRV TRV