1 ⁽இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த␢ திராட்சைக்கொடி, அது மிகுதியான␢ கனிகளைத்␢ தனக்கே தாங்கி நிற்கின்றது;␢ எவ்வளவு மிகுதியாகக்␢ கனிகளைக் கொடுத்ததோ,␢ அவ்வளவு மிகுதியாய்ப்␢ பலிபீடங்களை அமைத்தது;␢ எத்தகைய சிறப்புடன்␢ நாடு செழிப்புற்றதோ,␢ அதற்கு இணையாய்ச்␢ சிலைத் தூண்கள்␢ சிறப்புப் பெற்றன.⁾

2 ⁽இருமனம் கொண்ட␢ மக்களாகிய அவர்கள்,␢ தங்கள் குற்றத்திற்காகத்␢ தண்டனை பெறுவார்கள்;␢ ஆண்டவர் அவர்களுடைய␢ பலிபீடங்களைத் தகர்த்திடுவார்;␢ அவர்களுடைய சிலைத் தூண்களை␢ நொறுக்கிடுவார்.⁾

3 ⁽அப்போது அவர்கள்,␢ “நமக்கு அரசன் இல்லை;␢ ஆண்டவருக்கு நாம்␢ அஞ்சி நடக்கவில்லை;␢ அரசன் இருந்தாலும்,␢ நமக்கு என்ன செய்வான்?”␢ என்பார்கள்.⁾

4 ⁽வீண் வார்த்தைகளையே␢ அவர்கள் பேசுகின்றார்கள்.␢ பொய்யாணை இட்டு␢ உடன்படிக்கை செய்கின்றார்கள்;␢ ஆதலால், வயலின் உழவுச் சால்களில்␢ முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத்␢ தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.⁾

5 ⁽சமாரியாவில் குடியிருப்போர்␢ பெத்தாவேனிலுள்ள␢ கன்றுக் குட்டியை முன்னிட்டு␢ நடுங்குவர்;␢ அதன் மேன்மை இப்பொழுது␢ மறைந்துபோயிற்று;␢ அதைக் குறித்து அதன் மக்கள்␢ துயர் அடைவார்கள்;␢ அதன் குருக்களும் அதற்காகப் புலம்புவார்கள்.⁾

6 ⁽அதுவே அசீரியாவிலுள்ள␢ யாரேபு மன்னனுக்கு␢ அன்பளிப்பாகக் கொண்டுபோகப்படும்.␢ எப்ராயிம் வெட்கமடைவான்,␢ இஸ்ரயேல் தன் ஆலோசனையால்␢ நாணமடைவான்.⁾

7 ⁽சமாரியாவின் அரசன்␢ நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.⁾

8 ⁽இஸ்ரயேலின் பாவமாகிய␢ சிலை வழிபாட்டின்␢ உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்;␢ முள்களும், முட்புதர்களும்␢ அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்;␢ அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து,␢ ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்’␢ குன்றுகளைப் பார்த்து,␢ ‘எங்கள்மேல் விழுங்கள்’␢ என்று சொல்வார்கள்.⁾

9 ⁽இஸ்ரயேலர்␢ கிபயாவில் தங்கியிருந்த நாளிலிருந்தே␢ பாவம் செய்து வந்தார்கள்;␢ கிபயாவில்␢ பொல்லார்மேல் எழுந்த கடும் போர்␢ அவர்கள்மேலும் வராதா?⁾

10 ⁽நான் வந்து அவர்களைத் தண்டிப்பேன்;␢ அவர்கள் செய்த␢ இரட்டைத் தீச் செயல்களுக்குத்␢ தண்டனை வழங்கும் பொருட்டு␢ அவர்களுக்கு எதிராக␢ வேற்றினத்தார் ஒன்றுகூடுவர்.⁾

11 ⁽எப்ராயிம்,␢ நன்றாகப் பழக்கப்பட்டதும்,␢ புணையடிக்க விரும்புவதுமான␢ பசுவாய் இருக்கின்றான்;␢ நானோ அதன் அழகான கழுத்தின்மேல்␢ நுகத்தடியை வைப்பேன்;␢ எப்ராயிமை ஏரில் பூட்டுவேன்;␢ யூதா உழுவான்;␢ யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.⁾

12 ⁽நீதியை நீங்கள்␢ விதைத்துக் கொள்ளுங்கள்;␢ அன்பின் கனியை␢ அறுவடை செய்யுங்கள்;␢ உங்கள் தரிசு நிலத்தை␢ உழுது பண்படுத்துங்கள்;␢ ஏனெனில் ஆண்டவர் வந்து␢ உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு␢ நீங்கள் அவரைத் தேடும் காலம்␢ நெருங்கிவந்துவிட்டது.⁾

13 ⁽நீங்கள் கொடுமையை உழுதீர்கள்;␢ தீவினையை அறுவடை செய்தீர்கள்;␢ பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்;␢ உங்கள் தேர்ப்படைகளின்* மேலும்,␢ வீரர்களின் எண்ணிக்கையின் மேலும்␢ நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.⁾

14 ⁽ஆதலால் உங்கள் மக்களிடையே␢ போர்க் குரல் எழும்பும்;␢ உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்;␢ போரின் நாளில்␢ பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது␢ அன்னையர் தம் பிள்ளைகளோடு␢ மோதியடிக்கப்பட்டது போல␢ அது இருக்கும்.⁾

15 ⁽பெத்தேலே!␢ உன் கொடிய தீவினைக்காக␢ உனக்கும் இவ்வாறே செய்யப்படும்.␢ பொழுது விடியும்போது␢ இஸ்ரயேலின் அரசன்␢ அழிந்து போவது உறுதி.⁾