1 ⁽இஸ்ரயேல் வீட்டாரே, உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்;⁾

2 ⁽“இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண்␢ விழுந்துகிடக்கிறாள்,␢ இனி எழவேமாட்டாள்;␢ தரையில் தன்னந்தனியளாய்க்␢ கிடக்கின்றாள்;␢ அவளைத் தூக்கிவிடுவார் யாருமில்லை.”⁾

3 ⁽ஏனெனில், தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ “ஆயிரம் பேரை அனுப்பிய நகரில்␢ நூறு பேரே எஞ்சியிருப்பர்;␢ நூறு பேரை அனுப்பிய நகரில்␢ பத்துப் பேரே எஞ்சியிருப்பர்;␢ இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே.”⁾

4 ⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:␢ என்னைத் தேடுங்கள்,␢ நீங்கள் வாழ்வீர்கள்;⁾

5 ⁽ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள்,␢ கில்காலில்␢ காலெடுத்து வைக்காதீர்கள்;␢ பெயேர்செபாவுக்குக்␢ கடந்து போகவேண்டாம்;␢ ஏனெனில் கில்கால்␢ உண்மையாகவே நாடுகடத்தப்படும்;␢ பெத்தேல் பாழாக்கப்படும்.⁾

6 ⁽ஆண்டவரைத் தேடுங்கள்;␢ நீங்கள் வாழ்வீர்கள்;␢ இல்லையேல்␢ அவர் யோசேப்பின் வீட்டின்மேல்␢ தீ மூளச் செய்வார்.␢ அந்நெருப்பு அதை விழுங்கிவிடும்,␢ பெத்தேலில் அந்நெருப்பை␢ அணைக்கக்கூடியவர் எவருமிரார்.⁾

7 ⁽அவர்கள் நீதியை␢ எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்;␢ நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.⁾

8 ⁽ஆனால், அவரே␢ கார்த்திகை, மிருகசீரிடம்␢ ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்;␢ காரிருளைக் காலைப்பொழுது␢ ஆகச் செய்பவர்;␢ பகற்பொழுதை␢ இரவு வேளையாய் மாற்றுபவர்;␢ கடல் நீரை அழைத்து␢ நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்;␢ அவரது பெயர் “ஆண்டவர்”.⁾

9 ⁽வலிமை மிக்க தளங்கள்மேல்␢ அவர் அழிவை அனுப்புவதால்␢ அவை அழிவைக் காண்கின்றன.⁾

10 ⁽அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு␢ தங்களைக் கண்டிப்பவனைப்␢ பகைக்கிறார்கள்;␢ உண்மை பேசுபவனை␢ வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.⁾

11 ⁽நீங்கள் ஏழைகளை நசுக்கி,␢ அவர்களிடம் தானிய வரியாக␢ வாங்கியதைக் கொண்டு␢ நன்கு செதுக்கிய கற்களால்␢ வீடு கட்டினீர்கள்;␢ அந்த வீடுகளில் நீங்கள்␢ வாழப் போவதில்லை;␢ அருமையான திராட்சைத் தோட்டங்களை␢ அமைத்தீர்கள்;␢ அவை தரும் திராட்சை இரசத்தை␢ நீங்கள் குடிக்கப் போவதில்லை.⁾

12 ⁽உங்கள் குற்றங்கள்␢ எவ்வளவு மிகுதியானவை என்றும்␢ உங்கள் பாவங்கள்␢ எத்துணைக் கொடியவை என்றும்␢ நான் அறிவேன்;␢ நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள்,␢ கையூட்டு வாங்குகிறீர்கள்,␢ நகர் வாயிலில் வறியோருக்கு␢ நீதி வழங்க மறுக்கிறீர்கள்.⁾

13 ⁽அது கெட்ட காலம் என்பதால்,␢ அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.⁾

14 ⁽நன்மையை நாடுங்கள்,␢ தீமையைத் தேடாதீர்கள்;␢ அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல␢ படைகளின் கடவுளாகிய ஆண்டவர்␢ உங்களோடு இருப்பார்.⁾

15 ⁽தீமையை வெறுத்து␢ நன்மையை நாடுங்கள்;␢ நகர் வாயிலில்␢ நீதியை நிலைநாட்டுங்கள்;␢ அப்பொழுது ஒருவேளை␢ படைகளின் கடவுளாகிய ஆண்டவர்␢ யோசேப்பின் வீட்டாரில்␢ எஞ்சியிருப்போர்க்கு␢ இரக்கம் காட்டுவார்.⁾

16 ⁽ஆகையால், படைகளின் கடவுளும்␢ தலைவருமாகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்;␢ “பொதுவிடங்கள் எங்கும்␢ அழுகுரல் கேட்கும்,␢ எல்லா வீதிகளிலும்,␢ “ஐயோ! ஐயோ!” என்ற␢ புலம்பல் எழும்பும்;␢ வயலில் வேலை செய்வாரை␢ அழுவதற்குக் கூப்பிடுவர்;␢ ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை␢ ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.⁾

17 ⁽திராட்சைத் தோட்டம் எங்கணும்␢ ஒரே அழுகையாய் இருக்கும்;␢ ஏனெனில், உங்கள் நடுவே␢ நான் கடந்து செல்வென்”,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

18 ⁽ஆண்டவரின் நாளைப்␢ பார்க்க விரும்புவோரே,␢ உங்களுக்கு ஐயோ கேடு!␢ ஆண்டவரின் நாளுக்காக␢ நீங்கள் ஏங்குவது ஏன்?␢ அது ஒளிமிக்க நாளன்று;␢ இருள் சூழ்ந்த␢ நாளாகத் தான் இருக்கும்.⁾

19 ⁽அந்த நாள், சிங்கத்திடமிருந்து␢ தப்பி ஓடிய ஒருவனைக்␢ கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும்,␢ அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து,␢ சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது,␢ பாம்பு ஒன்று கடித்தாற்போலும்␢ இருக்கும்!⁾

20 ⁽ஆண்டவரின் நாள்␢ ஒளியின் நாள் அன்று;␢ அது இருள் கவிந்தது அல்லவா?␢ வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?⁾

21 ⁽“உங்கள் திருவிழாக்களை␢ நான் வெறுத்து அருவருக்கின்றேன்;␢ உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில்␢ எனக்கு விருப்பமே இல்லை.⁾

22 ⁽எரிபலிகளையும்␢ தானியப் படையல்களையும்␢ எனக்கு நீங்கள் செலுத்தினாலும்␢ நான் ஏற்க மாட்டேன்;␢ கொழுத்த விலங்குகளை␢ நல்லுறவுப் பலிகளாகச்␢ செலுத்தும்போது␢ நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.⁾

23 ⁽என் முன்னிலையில்␢ நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும்␢ பாடல்களை நிறுத்துங்கள்,␢ உங்கள் வீணைகளின் ஓசையை␢ நான் கேட்க மாட்டேன்.⁾

24 ⁽மாறாக, நீதி␢ வெள்ளமெனப் பொங்கி வருக!␢ நேர்மை␢ வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!⁾⒫

25 “இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?

26 நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்; அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்; அந்தச் சிலைகளை நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.

27 உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன்”, என்கிறார் ஆண்டவர்; அவரது பெயர் “படைகளின் கடவுள்.”

Amos 5 ERV IRV TRV