1 தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு:⒫

2 ⁽“சீயோனிலிருந்து ஆண்டவர்␢ கர்ச்சனை செய்கின்றார்;␢ எருசலேமிலிருந்து அவர்␢ முழங்குகின்றார்;␢ இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள்␢ தீய்ந்து போகின்றன;␢ கர்மேல் மலையின் உச்சியும்␢ காய்ந்து போகின்றது”.⁾

3 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ தமஸ்கு நகரினர்␢ எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக,␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்.␢ ஏனெனில், அவர்கள் கிலயாதை␢ இரும்புக் கருவிகளைக் கொண்டு␢ போராடித்தார்கள்.⁾

4 ⁽ஆதலால் அசாயேல் வீட்டின்மேல்␢ தீ மூளச் செய்வேன்.␢ அது பெனதாது கோட்டைகளை␢ விழுங்கிவிடும்.⁾

5 ⁽தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன்.␢ பிக்காத்தாவேனில்␢ குடியிருப்பவர்களையும்␢ பெத்ஏதேனில் செங்கோல்␢ பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்.␢ ஆராமின் மக்கள்␢ கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

6 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “காசா நகரினர் எண்ணற்ற␢ குற்றங்கள் செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்.␢ அவர்கள் ஒரு முழு இனத்தையே␢ ஏதோமுக்கு அடிமைகளாகக்␢ கையளித்தார்கள்;⁾

7 ⁽ஆதலால் காசாவின்␢ கோட்டை மதில்கள்மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்.␢ அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.⁾

8 ⁽அஸ்தோதில் குடியிருப்பவர்களையும்␢ அஸ்கலோனில் செங்கோல்␢ பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்;␢ எக்ரோனுக்கு எதிராக␢ என் கையை ஓங்குவேன்;␢ பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும்␢ அழிந்திடுவர்” என்கிறார்␢ ஆண்டவராகிய என் தலைவர்.⁾

9 ⁽ஆண்டவர் கூறுவுது இதுவே:␢ “தீர் நகரினர் எண்ணற்ற␢ குற்றங்கள் செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு␢ அடிமைகளாகக் கையளித்தார்கள்;␢ சகோதர உடன்படிக்கையை␢ அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.⁾

10 ⁽ஆதலால் தீரின் கோட்டை␢ மதில்கள் மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்;␢ அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.”⁾

11 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “ஏதோம் எண்ணற்ற␢ குற்றங்கள் செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்;␢ ஏனெனில், அவன் உறவுமுறையின்␢ கடமைகளை மீறி வாளேந்தித்␢ தன் சகோதரனையே துரத்தினான்;␢ தன் ஆத்திரத்தை␢ அடக்கி வைக்காமல் என்றென்றும்␢ கோபத்தைக் காட்டி வந்தான்.⁾

12 ⁽ஆதலால் தேமான்மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்;␢ அது பொட்சராவின் கோட்டைகளை␢ விழுங்கிவிடும்.⁾

13 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “அம்மோன் மக்கள்␢ எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ தங்கள் நாட்டு எல்லைகளை␢ விரிவுபடுத்துவதற்காகக்␢ கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப்␢ பீறிக் கிழித்தார்கள்.⁾

14 ⁽ஆதலால், இராபாவின் கோட்டை␢ மதில்கள்மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்.␢ அது அச்சுவர்களை விழுங்கி விடும்;␢ அப்பொழுது, போர்க்காலத்தின்␢ பேரிரைச்சலும், சூறாவளி நாளின்␢ கடும் புயலும் இருக்கும்.⁾

15 ⁽அவர்களுடைய அரசன்␢ அடிமையாய்க்␢ கொண்டு போகப்படுவான்.␢ அவனோடு அதிகாரிகளும்␢ கொண்டு போகப்படுவார்கள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Amos 1 ERV IRV TRV