ஏசாயா 52:2
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.
Tamil Indian Revised Version
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன மகளாகிய சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
Tamil Easy Reading Version
தூசியை உதறுங்கள்! உங்கள் அற்புதமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்! எருசலேமே, சீயோனின் மகளே, நீங்கள் சிறையில் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது, உங்கள் கழுத்தில் சுற்றிக்கிடந்த சங்கிலிகளில் இருந்து விடுதலை அடைந்தீர்கள்!
Thiru Viviliam
⁽சிறைப்பட்ட எருசலேமே,␢ புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்;␢ அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே,␢ உன் கழுத்திலுள்ள கட்டுகளை␢ அவிழ்த்துவிடு.⁾
King James Version (KJV)
Shake thyself from the dust; arise, and sit down, O Jerusalem: loose thyself from the bands of thy neck, O captive daughter of Zion.
American Standard Version (ASV)
Shake thyself from the dust; arise, sit `on thy throne’, O Jerusalem: loose thyself from the bonds of thy neck, O captive daughter of Zion.
Bible in Basic English (BBE)
Make yourself clean from the dust; up! and take the seat of your power, O Jerusalem: the bands of your neck are loose, O prisoned daughter of Zion.
Darby English Bible (DBY)
Shake thyself from the dust; arise, sit down, Jerusalem: loose thyself from the bands of thy neck, captive daughter of Zion.
World English Bible (WEB)
Shake yourself from the dust; arise, sit [on your throne], Jerusalem: loose yourself from the bonds of your neck, captive daughter of Zion.
Young’s Literal Translation (YLT)
Shake thyself from dust, arise, sit, O Jerusalem, Bands of thy neck have loosed themselves, O captive, daughter of Zion.
ஏசாயா Isaiah 52:2
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.
Shake thyself from the dust; arise, and sit down, O Jerusalem: loose thyself from the bands of thy neck, O captive daughter of Zion.
| הִתְנַעֲרִ֧י | hitnaʿărî | heet-na-uh-REE | |
| מֵעָפָ֛ר | mēʿāpār | may-ah-FAHR | |
| ק֥וּמִי | qûmî | KOO-mee | |
| שְּׁבִ֖י | šĕbî | sheh-VEE | |
| יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM | |
| הִֽתְפַּתְּחִו֙ | hitĕppattĕḥiw | hee-teh-pa-teh-HEEV | |
| מוֹסְרֵ֣י | môsĕrê | moh-seh-RAY | |
| צַוָּארֵ֔ךְ | ṣawwāʾrēk | tsa-wa-RAKE | |
| שְׁבִיָּ֖ה | šĕbiyyâ | sheh-vee-YA | |
| בַּת | bat | baht | |
| צִיּֽוֹן׃ | ṣiyyôn | tsee-yone |
Cross Reference
எரேமியா 51:45
என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆததுமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.
லுூக்கா 21:24
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
லுூக்கா 4:18
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
சகரியா 2:6
ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 51:50
பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.
ஏசாயா 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,
ஏசாயா 51:14
சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
ஏசாயா 29:4
அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.
ஏசாயா 3:26
அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
எரேமியா 51:6
நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.
ஏசாயா 51:23
உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.
ஏசாயா 49:21
அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.
Tags தூசியை உதறிவிட்டு எழுந்திரு எருசலேமே வீற்றிரு சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு
Isaiah 52:2 in Tamil Concordance Isaiah 52:2 in Tamil Interlinear Isaiah 52:2 in Tamil Image