அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
| And it shall come to pass | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
| in that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day, | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
| that a great | תִּֽהְיֶ֧ה | tihĕye | tee-heh-YEH |
| tumult | מְהֽוּמַת | mĕhûmat | meh-HOO-maht |
| from the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| shall be | רַבָּ֖ה | rabbâ | ra-BA |
| among them; and they shall lay hold | בָּהֶ֑ם | bāhem | ba-HEM |
| every one | וְהֶחֱזִ֗יקוּ | wĕheḥĕzîqû | veh-heh-hay-ZEE-koo |
| on the hand | אִ֚ישׁ | ʾîš | eesh |
| of his neighbour, | יַ֣ד | yad | yahd |
| and his hand | רֵעֵ֔הוּ | rēʿēhû | ray-A-hoo |
| shall rise up | וְעָלְתָ֥ה | wĕʿoltâ | veh-ole-TA |
| against | יָד֖וֹ | yādô | ya-DOH |
| the hand | עַל | ʿal | al |
| of his neighbour. | יַ֥ד | yad | yahd |
| רֵעֵֽהוּ׃ | rēʿēhû | ray-ay-HOO |