தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:
உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:
இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.
பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.
அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
| Then said | וָאֹמַ֕ר | wāʾōmar | va-oh-MAHR |
| I, What | מָ֛ה | mâ | ma |
| come | אֵ֥לֶּה | ʾēlle | A-leh |
| these | בָאִ֖ים | bāʾîm | va-EEM |
| to do? | לַֽעֲשׂ֑וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| And he spake, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| These | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| are the horns | הַקְּרָנ֞וֹת | haqqĕrānôt | ha-keh-ra-NOTE |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| have scattered | זֵ֣רוּ | zērû | ZAY-roo |
| אֶת | ʾet | et | |
| Judah, | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| so that | כְּפִי | kĕpî | keh-FEE |
| no | אִישׁ֙ | ʾîš | eesh |
| man | לֹא | lōʾ | loh |
| did lift up | נָשָׂ֣א | nāśāʾ | na-SA |
| his head: | רֹאשׁ֔וֹ | rōʾšô | roh-SHOH |
| but these | וַיָּבֹ֤אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| are come | אֵ֙לֶּה֙ | ʾēlleh | A-LEH |
| to fray | לְהַחֲרִ֣יד | lĕhaḥărîd | leh-ha-huh-REED |
| them, to cast out | אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM |
| לְיַדּ֞וֹת | lĕyaddôt | leh-YA-dote | |
| the horns | אֶת | ʾet | et |
| of the Gentiles, | קַרְנ֣וֹת | qarnôt | kahr-NOTE |
| which lifted up | הַגּוֹיִ֗ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| their horn | הַנֹּשְׂאִ֥ים | hannōśĕʾîm | ha-noh-seh-EEM |
| over | קֶ֛רֶן | qeren | KEH-ren |
| the land | אֶל | ʾel | el |
| of Judah | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| to scatter | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| it. | לְזָרוֹתָֽהּ׃ | lĕzārôtāh | leh-za-roh-TA |