1 ⁽கடவுளே! எனக்கு இரங்கும்,␢ எனக்கு இரங்கும்;␢ நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;␢ இடர் நீங்கும்வரை␢ உம் இறக்கைகளின் நிழலையே␢ எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.⁾

2 ⁽உன்னதரான கடவுளை நோக்கி,␢ எனக்காக யாவையும் செய்து முடிக்கும்␢ இறைவனை நோக்கியே␢ நான் மன்றாடுகின்றேன்.⁾

3 ⁽வானகத்தினின்று அவர்␢ எனக்கு உதவி அனுப்பி␢ என்னைக் காத்தருள்வார்;␢ என்னை நசுக்குவோரை␢ இழிவுப்படுத்துவார். (சேலா)␢ கடவுள் தம் பேரன்பையும்␢ வாக்குப் பிறழாமையையும்␢ வெளிப்படுத்துவார்.⁾

4 ⁽மனிதரை வெறியோடு விழுங்கும்␢ சிங்கங்கள் போன்றவரிடையே␢ நான் கிடக்கின்றேன்;␢ அவர்களின் பற்கள்␢ ஈட்டியும் அம்பும் போன்றவை;␢ அவர்களின் நா␢ கூர்மையான வாள் போன்றது.⁾

5 ⁽கடவுளே! வானங்களுக்கு மேலாக␢ நீர் உயர்த்தப்பெறுவீராக!␢ பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!⁾

6 ⁽நான் நடக்கும் வழியில்␢ எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;␢ நான் மனம் ஒடிந்து போனேன்;␢ என் பாதையில் குழி வெட்டினர்;␢ அவர்களே அதில் விழுந்தனர். (சேலா)⁾

7 ⁽என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;␢ கடவுளே! என் உள்ளம்␢ உறுதியாயிருக்கின்றது;␢ நான் பாடுவேன்;␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾

8 ⁽என் நெஞ்சே, விழித்தெழு!␢ வீணையே, யாழே, விழித்தெழுங்கள்;␢ வைகறையை நான்␢ விழித்தெழச் செய்வேன்.⁾

9 ⁽என் தலைவரே!␢ மக்களினங்களிடையே␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ எல்லா இனத்தாரிடையேயும்␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾

10 ⁽ஆண்டவரே! உமது பேரன்பு␢ வானளவு உயர்ந்துள்ளது!␢ உமது வாக்குப்பிறழாமை␢ முகில்களைத் தொடுகின்றது!⁾

11 ⁽கடவுளே! வானங்களுக்கு மேலாக␢ நீர் உயர்வு பெறுவீராக;␢ பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.⁾