பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா
நின் பாடு நினைந்தென்னைச் சேர் ஐயா
தீதகற்றவே சிறந்த சேன் உலகினிமை விட்டு
பூதல துகந்துவந்த புண்ணியனே யேசு தேவா
வந்தறும் எப்பாவிகளையும்
அங்கீகரிக்கும் மாசில்லாத இயேசு நாதனே
உந்தன் இடம் வந்துளமே உருகி
அழுத மாது முந்தி மிகச் செய்த பாவம்
முழுதும் பொறுத்தாய் அன்றோ
சிந்தின உன் உதிரம் அதே தீயோன்
மறத்தை சின்னபின்னம் செய்ய வல்லதே
பந்தம் உற உந்தன் வலப் பாகா முற்ற
கள்வனையே விந்தையுறவே
இரட்சித்த வேதனே அவ்விதமாயே
அற்ப விசுவாசமுளன் ஆம் – அடியேனை
இனி ஆதரிப்பதார் உன் தஞ்சமே
தற்பரே உனைத் தரிசித் தன்றி நம்பிடேன்
எனவே செப்பின தோமாவுக்குப்போல்
திரு உருக்காட்சி தந்து
Paathakan En Vinaitheer Chords for Keyboard, Guitar and Piano