எண்ணாகமம் 14:8
கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் நம்மேல் பிரியமாக இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.
Tamil Easy Reading Version
அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார்.
Thiru Viviliam
ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டினுள் அவர் நம்மை அழைத்துச் சென்று அதை நமக்குத் தருவார்.⒫
King James Version (KJV)
If the LORD delight in us, then he will bring us into this land, and give it us; a land which floweth with milk and honey.
American Standard Version (ASV)
If Jehovah delight in us, then he will bring us into this land, and give it unto us; a land which floweth with milk and honey.
Bible in Basic English (BBE)
And if the Lord has delight in us, he will take us into this land and give it to us, a land flowing with milk and honey.
Darby English Bible (DBY)
If Jehovah delight in us, he will bring us into this land, and give it us, a land that flows with milk and honey;
Webster’s Bible (WBT)
If the LORD delighteth in us, then he will bring us into this land, and give it to us; a land which floweth with milk and honey.
World English Bible (WEB)
If Yahweh delight in us, then he will bring us into this land, and give it to us; a land which flows with milk and honey.
Young’s Literal Translation (YLT)
if Jehovah hath delighted in us, then He hath brought us in unto this land, and hath given it to us, a land which is flowing with milk and honey;
எண்ணாகமம் Numbers 14:8
கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.
If the LORD delight in us, then he will bring us into this land, and give it us; a land which floweth with milk and honey.
| אִם | ʾim | eem | |
| חָפֵ֥ץ | ḥāpēṣ | ha-FAYTS | |
| בָּ֙נוּ֙ | bānû | BA-NOO | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| וְהֵבִ֤יא | wĕhēbîʾ | veh-hay-VEE | |
| אֹתָ֙נוּ֙ | ʾōtānû | oh-TA-NOO | |
| אֶל | ʾel | el | |
| הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE | |
| וּנְתָנָ֖הּ | ûnĕtānāh | oo-neh-ta-NA | |
| לָ֑נוּ | lānû | LA-noo | |
| אֶ֕רֶץ | ʾereṣ | EH-rets | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| הִ֛וא | hiw | heev | |
| זָבַ֥ת | zābat | za-VAHT | |
| חָלָ֖ב | ḥālāb | ha-LAHV | |
| וּדְבָֽשׁ׃ | ûdĕbāš | oo-deh-VAHSH |
Cross Reference
உபாகமம் 10:15
ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.
எண்ணாகமம் 13:27
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
ஏசாயா 62:4
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சி என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
சங்கீதம் 22:8
கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
1 இராஜாக்கள் 10:9
உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், Ψியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
2 சாமுவேல் 22:20
என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
செப்பனியா 3:17
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
எரேமியா 32:41
அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.
சங்கீதம் 147:10
அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
2 சாமுவேல் 15:25
ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத்திரும்ப வரப்பண்ணுவார்.
யாத்திராகமம் 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
Tags கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால் அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய் பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்
Numbers 14:8 in Tamil Concordance Numbers 14:8 in Tamil Interlinear Numbers 14:8 in Tamil Image