ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே
இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம் – மூவர்
பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்
ஆதாமுக்கு ஏவாலை
கொடுத்த பிதாவே – இம்மாப்பிள்ளைக்கு
பெண்ணை கொடுக்க வாருமே
இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே – இவர்கள்
இரு கையும் இணைக்க வாருமே
மெய் மணவாளனான
தேவ குமாரர்க்கே – சபையாம்
மனையாளை ஜோடிக்கும் ஆவியே
நீரும் இந்நாளில் வந்து
இவ்விரு பேரையும் – இணைத்து
அன்பாய் வாழ்த்தி மெய் பாக்கயம் ஈந்திடும்
கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும் – எத்தீங்கில்
நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்
Aethaenil Aathi Manam Chords for Keyboard, Guitar and Piano