அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.
மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.
கர்த்தர் ஆரோனை நோக்கி:
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
| And Aaron | וַיְדַבֵּ֨ר | waydabbēr | vai-da-BARE |
| said | אַֽהֲרֹ֜ן | ʾahărōn | ah-huh-RONE |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| Behold, | הֵ֣ן | hēn | hane |
| this day | הַ֠יּוֹם | hayyôm | HA-yome |
| have they offered | הִקְרִ֨יבוּ | hiqrîbû | heek-REE-voo |
| אֶת | ʾet | et | |
| their sin offering | חַטָּאתָ֤ם | ḥaṭṭāʾtām | ha-ta-TAHM |
| and their burnt offering | וְאֶת | wĕʾet | veh-ET |
| before | עֹֽלָתָם֙ | ʿōlātām | oh-la-TAHM |
| the Lord; | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| and such things | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| have befallen | וַתִּקְרֶ֥אנָה | wattiqreʾnâ | va-teek-REH-na |
| me: and if I had eaten | אֹתִ֖י | ʾōtî | oh-TEE |
| the sin offering | כָּאֵ֑לֶּה | kāʾēlle | ka-A-leh |
| to day, | וְאָכַ֤לְתִּי | wĕʾākaltî | veh-ah-HAHL-tee |
| should it have been accepted | חַטָּאת֙ | ḥaṭṭāt | ha-TAHT |
| in the sight | הַיּ֔וֹם | hayyôm | HA-yome |
| of the Lord? | הַיִּיטַ֖ב | hayyîṭab | ha-yee-TAHV |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |