நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
பின்பு அவன் அந்தச் சர்வாங்கத் தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,
அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.
பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.
அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,
அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
| And he shall kill | וְשָׁחַ֛ט | wĕšāḥaṭ | veh-sha-HAHT |
| אֶת | ʾet | et | |
| the bullock | בֶּ֥ן | ben | ben |
| הַבָּקָ֖ר | habbāqār | ha-ba-KAHR | |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and the priests, | וְ֠הִקְרִיבוּ | wĕhiqrîbû | VEH-heek-ree-voo |
| Aaron's | בְּנֵ֨י | bĕnê | beh-NAY |
| sons, | אַֽהֲרֹ֤ן | ʾahărōn | ah-huh-RONE |
| shall bring | הַכֹּֽהֲנִים֙ | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| אֶת | ʾet | et | |
| the blood, | הַדָּ֔ם | haddām | ha-DAHM |
| and sprinkle | וְזָֽרְק֨וּ | wĕzārĕqû | veh-za-reh-KOO |
| אֶת | ʾet | et | |
| the blood | הַדָּ֤ם | haddām | ha-DAHM |
| round about | עַל | ʿal | al |
| upon | הַמִּזְבֵּ֙חַ֙ | hammizbēḥa | ha-meez-BAY-HA |
| the altar | סָבִ֔יב | sābîb | sa-VEEV |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| is by the door | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| of the tabernacle | אֹ֥הֶל | ʾōhel | OH-hel |
| of the congregation. | מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |