கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?
என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.
இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.
| The spoilers | עַֽל | ʿal | al |
| are come | כָּל | kāl | kahl |
| upon | שְׁפָיִ֣ם | šĕpāyim | sheh-fa-YEEM |
| all | בַּמִּדְבָּ֗ר | bammidbār | ba-meed-BAHR |
| high places | בָּ֚אוּ | bāʾû | BA-oo |
| through the wilderness: | שֹֽׁדְדִ֔ים | šōdĕdîm | shoh-deh-DEEM |
| for | כִּ֣י | kî | kee |
| the sword | חֶ֤רֶב | ḥereb | HEH-rev |
| of the Lord | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
| shall devour | אֹֽכְלָ֔ה | ʾōkĕlâ | oh-heh-LA |
| from the one end | מִקְצֵה | miqṣē | meek-TSAY |
| of the land | אֶ֖רֶץ | ʾereṣ | EH-rets |
| even to | וְעַד | wĕʿad | veh-AD |
| the other end | קְצֵ֣ה | qĕṣē | keh-TSAY |
| of the land: | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| no | אֵ֥ין | ʾên | ane |
| שָׁל֖וֹם | šālôm | sha-LOME | |
| flesh | לְכָל | lĕkāl | leh-HAHL |
| shall have peace. | בָּשָֽׂר׃ | bāśār | ba-SAHR |