துதிகளின் பாத்திரனே
துதிதனை ஏந்தி நின்றோம்
தூயாவி அருள் தாருமே
துதிகளின் பாத்திரனே
கடந்த எம் நாட்களெல்லாம்
கருணையாய் நடத்தினாரே
கருத்துடன் மா தயவை
கனிவுடன் பாடிடுவோம்
…துதிகளின்
ஆபத்து நாளினிலே
ஏற்ற சகாயம் நீரே
அதிசயம் செய்பவரே
துதிகளை செலுத்துகின்றோம்
…துதிகளின்
முற்றுமாய் பலியாகவே
அப்பணித்தோம் எம்மையே
ஆளுகை செய்திடுவீர்
ஆசீரை அளித்திடுவீர்
…துதிகளின்
மகிமையின் விண்ணரசர்
மகத்துவ தேவனவர்
மகிமையாம் கனமதனை
மகிழ்வுடன் செலுத்துகின்றோம்
…துதிகளின்
Thuthikalin Paaththiranae Chords for Keyboard, Guitar and Piano