தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
| And the Lord | וַיָּ֣רַח | wayyāraḥ | va-YA-rahk |
| smelled | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| a sweet | אֶת | ʾet | et |
| רֵ֣יחַ | rêaḥ | RAY-ak | |
| savour; | הַנִּיחֹחַ֒ | hannîḥōḥa | ha-nee-hoh-HA |
| and the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| in | אֶל | ʾel | el |
| his heart, | לִבּ֗וֹ | libbô | LEE-boh |
| I will not | לֹֽא | lōʾ | loh |
| again | אֹ֠סִף | ʾōsip | OH-seef |
| curse | לְקַלֵּ֨ל | lĕqallēl | leh-ka-LALE |
| ע֤וֹד | ʿôd | ode | |
| the ground | אֶת | ʾet | et |
| any more | הָֽאֲדָמָה֙ | hāʾădāmāh | ha-uh-da-MA |
| for man's | בַּֽעֲב֣וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| sake; | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
| for | כִּ֠י | kî | kee |
| the imagination | יֵ֣צֶר | yēṣer | YAY-tser |
| of man's | לֵ֧ב | lēb | lave |
| heart | הָֽאָדָ֛ם | hāʾādām | ha-ah-DAHM |
| is evil | רַ֖ע | raʿ | ra |
| from his youth; | מִנְּעֻרָ֑יו | minnĕʿurāyw | mee-neh-oo-RAV |
| neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| will I again | אֹסִ֥ף | ʾōsip | oh-SEEF |
| smite | ע֛וֹד | ʿôd | ode |
| any more | לְהַכּ֥וֹת | lĕhakkôt | leh-HA-kote |
| אֶת | ʾet | et | |
| every thing | כָּל | kāl | kahl |
| living, | חַ֖י | ḥay | hai |
| as | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| I have done. | עָשִֽׂיתִי׃ | ʿāśîtî | ah-SEE-tee |