அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.
இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.
தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
| And the land | וְאֶת | wĕʾet | veh-ET |
| which | הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| I gave | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| Abraham | נָתַ֛תִּי | nātattî | na-TA-tee |
| and Isaac, | לְאַבְרָהָ֥ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| to thee | וּלְיִצְחָ֖ק | ûlĕyiṣḥāq | oo-leh-yeets-HAHK |
| I will give it, | לְךָ֣ | lĕkā | leh-HA |
| and to thy seed | אֶתְּנֶ֑נָּה | ʾettĕnennâ | eh-teh-NEH-na |
| after thee | וּֽלְזַרְעֲךָ֥ | ûlĕzarʿăkā | oo-leh-zahr-uh-HA |
| will I give | אַֽחֲרֶ֖יךָ | ʾaḥărêkā | ah-huh-RAY-ha |
| אֶתֵּ֥ן | ʾettēn | eh-TANE | |
| the land. | אֶת | ʾet | et |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |