யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.
யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.
அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.
லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.
மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.
| And Laban | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | לָבָן֙ | lābān | la-VAHN |
| unto Jacob, | לְיַֽעֲקֹ֔ב | lĕyaʿăqōb | leh-ya-uh-KOVE |
| Because | הֲכִֽי | hăkî | huh-HEE |
| thou | אָחִ֣י | ʾāḥî | ah-HEE |
| art my brother, | אַ֔תָּה | ʾattâ | AH-ta |
| shouldest thou therefore serve | וַֽעֲבַדְתַּ֖נִי | waʿăbadtanî | va-uh-vahd-TA-nee |
| me for nought? | חִנָּ֑ם | ḥinnām | hee-NAHM |
| tell | הַגִּ֥ידָה | haggîdâ | ha-ɡEE-da |
| me, what | לִּ֖י | lî | lee |
| shall thy wages | מַה | ma | ma |
| be? | מַּשְׂכֻּרְתֶּֽךָ׃ | maśkurtekā | mahs-koor-TEH-ha |