இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.
வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.
அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.
| And he removed | וַיַּעְתֵּ֣ק | wayyaʿtēq | va-ya-TAKE |
| from thence, | מִשָּׁ֗ם | miššām | mee-SHAHM |
| and digged | וַיַּחְפֹּר֙ | wayyaḥpōr | va-yahk-PORE |
| another | בְּאֵ֣ר | bĕʾēr | beh-ARE |
| well; | אַחֶ֔רֶת | ʾaḥeret | ah-HEH-ret |
| and for | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| that they strove | רָב֖וּ | rābû | ra-VOO |
| not: | עָלֶ֑יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| and he called | וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA |
| the name | שְׁמָהּ֙ | šĕmāh | sheh-MA |
| of it Rehoboth; | רְחֹב֔וֹת | rĕḥōbôt | reh-hoh-VOTE |
| and he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| For | כִּֽי | kî | kee |
| now | עַתָּ֞ה | ʿattâ | ah-TA |
| the Lord | הִרְחִ֧יב | hirḥîb | heer-HEEV |
| hath made room | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| for us, and we shall be fruitful | לָ֖נוּ | lānû | LA-noo |
| in the land. | וּפָרִ֥ינוּ | ûpārînû | oo-fa-REE-noo |
| בָאָֽרֶץ׃ | bāʾāreṣ | va-AH-rets |