ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே
கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
…ஏழைகளின்
தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும் போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்
…ஏழைகளின்
Aelaikalin Pelanae Chords for Keyboard, Guitar and Piano